FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, December 30, 2013

நாடு தழுவிய கோரிக்கை முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம்



தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்
“வெண்மணி இல்லம், K.அனந்தநம்பியார் நகர்,
கரூர் பைபாஸ் ரோடு, திருச்சி-2.



நாடு தழுவிய கோரிக்கை முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 08.01.2014 புதன் கிழமை காலை 10.00 மணி
இடம்: BSNL  அலுவலகம், கண்டோண்மெண்ட், திருச்சி-1

அன்பிற்குரியவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! வணக்கம்.

காதுகேளாத வாய்பேசமுடியாதவர்கள் தகவல் பரிமாற்றம் – அவர்களின் பேசும் மொழியே SMS தான். SMS மூலம் தான் பல்வேறு துறைகள், சமூக செயல்பாடுகளில் ஈடுபடும் காதுகேளாதவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். Black out Days எனப்படும் நாட்களில் SMS கட்டணங்கள் சலுகை இல்லாமல் எல்லோருக்கும் ரூ.1/-என ஆக்குவது இவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. இவர்களின் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. சமூக செயல்பாடு சுருங்கிவிடுகிறது. வேறு மாற்று இல்லாத காதுகேளாதோரின் இந்த பாதிப்பை உணர்ந்து UNCRPD எனப்படுகிற ஐக்கிய நாடுகள் சபையின் கன்வென்ஷன் விதிகளை இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்றுள்ளது. இந்த விதிகளின்படி நமக்குரிய தகவல் தொழில்நுட்ப வசதிகளை உரிமைகளின் அடிப்படையில் இலவசமாக அளிக்க வேண்டியது அரசுக்கு கட்டாயமாகும்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கமும், அதன் தேசிய சங்கமான ஊனமுற்றோருக்கான தேசிய மேடையும் மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை, தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் முறையிட்டும் இதுவரை எந்தப் பலனும் இல்லை.
 

மத்திய அரசே!
  1. பண்டிகை, சிறப்பு நாட்களில் கூடுதல் கட்டணம் ரத்து செய்தும்.
  2. SMS க்கு சிறப்பு சலுகையில் அனைத்து நாட்களிலும் காதுகேளாதோர்க்கு வழங்குமாறும்.
  3. 3G வீடியோ சாட் இலவசமாக வழங்குமாறும்.
  4. மத்திய, மாநில அரசுகளே தலையிட்டு தீர்வு கண்டிடு என்றும்.
  5. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற வெளி மாநிலங்களுக்கு SMS அனுப்புவதில் சலுகை வழங்குக.
  6. SMS அனுப்பும்போது கால தாமதமின்றி உடனடியாக SMS கிடைக்கும்படி செய்யவேண்டும்.
  7. INTERNET க்கு சிறப்பு தள்ளுபடி சலுகையில் காதுகேளாதோர்க்கு வழங்கு.
என கோருகிறோம்.
தலைமை: R.ரவி (மாவட்ட தலைவர்) TARATDAC
சிறப்புரை: V.V.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) TARATDAC
N.ரமேஷ்பாபு (தலைவர்), M.சிவகுமார் (செயலாளர்), C.புஷ்பநாதன்(பொருளாளர்)
(திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம்- TDWAD)

சரவணன் – G.நெடுஞ்செழியன் – ரமேஷ் – அப்துல்சலாம் – கலியபெருமாள் – S.ஞானசேகர் – S.கோவிந்தராஜன் – ஜெயராமன் – சித்ரா மற்றும் பலர்.
இவண்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) மற்றும்

திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம் (TDWAD)
CELL: 9443179508,   SMS: 8754896891, 7373383825, 9489559215

No comments:

Post a Comment