FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, December 30, 2013

நாடு தழுவிய கோரிக்கை முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம்



தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்
“வெண்மணி இல்லம், K.அனந்தநம்பியார் நகர்,
கரூர் பைபாஸ் ரோடு, திருச்சி-2.



நாடு தழுவிய கோரிக்கை முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 08.01.2014 புதன் கிழமை காலை 10.00 மணி
இடம்: BSNL  அலுவலகம், கண்டோண்மெண்ட், திருச்சி-1

அன்பிற்குரியவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! வணக்கம்.

காதுகேளாத வாய்பேசமுடியாதவர்கள் தகவல் பரிமாற்றம் – அவர்களின் பேசும் மொழியே SMS தான். SMS மூலம் தான் பல்வேறு துறைகள், சமூக செயல்பாடுகளில் ஈடுபடும் காதுகேளாதவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். Black out Days எனப்படும் நாட்களில் SMS கட்டணங்கள் சலுகை இல்லாமல் எல்லோருக்கும் ரூ.1/-என ஆக்குவது இவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. இவர்களின் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. சமூக செயல்பாடு சுருங்கிவிடுகிறது. வேறு மாற்று இல்லாத காதுகேளாதோரின் இந்த பாதிப்பை உணர்ந்து UNCRPD எனப்படுகிற ஐக்கிய நாடுகள் சபையின் கன்வென்ஷன் விதிகளை இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்றுள்ளது. இந்த விதிகளின்படி நமக்குரிய தகவல் தொழில்நுட்ப வசதிகளை உரிமைகளின் அடிப்படையில் இலவசமாக அளிக்க வேண்டியது அரசுக்கு கட்டாயமாகும்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கமும், அதன் தேசிய சங்கமான ஊனமுற்றோருக்கான தேசிய மேடையும் மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை, தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் முறையிட்டும் இதுவரை எந்தப் பலனும் இல்லை.
 

மத்திய அரசே!
  1. பண்டிகை, சிறப்பு நாட்களில் கூடுதல் கட்டணம் ரத்து செய்தும்.
  2. SMS க்கு சிறப்பு சலுகையில் அனைத்து நாட்களிலும் காதுகேளாதோர்க்கு வழங்குமாறும்.
  3. 3G வீடியோ சாட் இலவசமாக வழங்குமாறும்.
  4. மத்திய, மாநில அரசுகளே தலையிட்டு தீர்வு கண்டிடு என்றும்.
  5. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற வெளி மாநிலங்களுக்கு SMS அனுப்புவதில் சலுகை வழங்குக.
  6. SMS அனுப்பும்போது கால தாமதமின்றி உடனடியாக SMS கிடைக்கும்படி செய்யவேண்டும்.
  7. INTERNET க்கு சிறப்பு தள்ளுபடி சலுகையில் காதுகேளாதோர்க்கு வழங்கு.
என கோருகிறோம்.
தலைமை: R.ரவி (மாவட்ட தலைவர்) TARATDAC
சிறப்புரை: V.V.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) TARATDAC
N.ரமேஷ்பாபு (தலைவர்), M.சிவகுமார் (செயலாளர்), C.புஷ்பநாதன்(பொருளாளர்)
(திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம்- TDWAD)

சரவணன் – G.நெடுஞ்செழியன் – ரமேஷ் – அப்துல்சலாம் – கலியபெருமாள் – S.ஞானசேகர் – S.கோவிந்தராஜன் – ஜெயராமன் – சித்ரா மற்றும் பலர்.
இவண்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) மற்றும்

திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம் (TDWAD)
CELL: 9443179508,   SMS: 8754896891, 7373383825, 9489559215

No comments:

Post a Comment