FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, December 30, 2013

நாடு தழுவிய கோரிக்கை முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம்



தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்
“வெண்மணி இல்லம், K.அனந்தநம்பியார் நகர்,
கரூர் பைபாஸ் ரோடு, திருச்சி-2.



நாடு தழுவிய கோரிக்கை முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 08.01.2014 புதன் கிழமை காலை 10.00 மணி
இடம்: BSNL  அலுவலகம், கண்டோண்மெண்ட், திருச்சி-1

அன்பிற்குரியவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! வணக்கம்.

காதுகேளாத வாய்பேசமுடியாதவர்கள் தகவல் பரிமாற்றம் – அவர்களின் பேசும் மொழியே SMS தான். SMS மூலம் தான் பல்வேறு துறைகள், சமூக செயல்பாடுகளில் ஈடுபடும் காதுகேளாதவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். Black out Days எனப்படும் நாட்களில் SMS கட்டணங்கள் சலுகை இல்லாமல் எல்லோருக்கும் ரூ.1/-என ஆக்குவது இவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. இவர்களின் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. சமூக செயல்பாடு சுருங்கிவிடுகிறது. வேறு மாற்று இல்லாத காதுகேளாதோரின் இந்த பாதிப்பை உணர்ந்து UNCRPD எனப்படுகிற ஐக்கிய நாடுகள் சபையின் கன்வென்ஷன் விதிகளை இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்றுள்ளது. இந்த விதிகளின்படி நமக்குரிய தகவல் தொழில்நுட்ப வசதிகளை உரிமைகளின் அடிப்படையில் இலவசமாக அளிக்க வேண்டியது அரசுக்கு கட்டாயமாகும்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கமும், அதன் தேசிய சங்கமான ஊனமுற்றோருக்கான தேசிய மேடையும் மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை, தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் முறையிட்டும் இதுவரை எந்தப் பலனும் இல்லை.
 

மத்திய அரசே!
  1. பண்டிகை, சிறப்பு நாட்களில் கூடுதல் கட்டணம் ரத்து செய்தும்.
  2. SMS க்கு சிறப்பு சலுகையில் அனைத்து நாட்களிலும் காதுகேளாதோர்க்கு வழங்குமாறும்.
  3. 3G வீடியோ சாட் இலவசமாக வழங்குமாறும்.
  4. மத்திய, மாநில அரசுகளே தலையிட்டு தீர்வு கண்டிடு என்றும்.
  5. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற வெளி மாநிலங்களுக்கு SMS அனுப்புவதில் சலுகை வழங்குக.
  6. SMS அனுப்பும்போது கால தாமதமின்றி உடனடியாக SMS கிடைக்கும்படி செய்யவேண்டும்.
  7. INTERNET க்கு சிறப்பு தள்ளுபடி சலுகையில் காதுகேளாதோர்க்கு வழங்கு.
என கோருகிறோம்.
தலைமை: R.ரவி (மாவட்ட தலைவர்) TARATDAC
சிறப்புரை: V.V.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) TARATDAC
N.ரமேஷ்பாபு (தலைவர்), M.சிவகுமார் (செயலாளர்), C.புஷ்பநாதன்(பொருளாளர்)
(திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம்- TDWAD)

சரவணன் – G.நெடுஞ்செழியன் – ரமேஷ் – அப்துல்சலாம் – கலியபெருமாள் – S.ஞானசேகர் – S.கோவிந்தராஜன் – ஜெயராமன் – சித்ரா மற்றும் பலர்.
இவண்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) மற்றும்

திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம் (TDWAD)
CELL: 9443179508,   SMS: 8754896891, 7373383825, 9489559215

No comments:

Post a Comment