FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, December 30, 2013

மாற்றுத் திறனாளிகள் 163 பேருக்கு இலவச வீடுகள்: ஆட்சியர்


திருநெல்வேலி, 27 December 2013

திருநெல்வேலி மாவட்டத்தில் 2013-14ஆம் நிதியாண்டில் 163 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவத்தார்.

பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவேன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அவர் பேசியது:

மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில், நிகழாண்டு மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 20,202 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 47,872 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 74 பேருக்கும், பசுமை வீடுகள் திட்டத்தில் 89 பேருக்கும் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 26 பேருக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 8.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ரூ. 34.91 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 36 பேரூராட்சிகளில் 47 இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 23 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் எண்ணற்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகளும் சகமனிதர்களைப் போல சமூகத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை அவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில், 12 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், 17 பேருக்கு செயற்கை உபகரணங்களும் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில், பள்ளித் தாளாளர் கே.பி.கே. செல்வராஜ், செஞ்சிலுவை சங்க மாநில துணைத் தலைவர் டி.ஏ. பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ். ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ஜான்சன், பார்வையற்றோர் பள்ளி முதல்வர் கிங்ஸ்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment