FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, December 30, 2013

மாற்றுத் திறனாளிகள் 163 பேருக்கு இலவச வீடுகள்: ஆட்சியர்


திருநெல்வேலி, 27 December 2013

திருநெல்வேலி மாவட்டத்தில் 2013-14ஆம் நிதியாண்டில் 163 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவத்தார்.

பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவேன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அவர் பேசியது:

மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில், நிகழாண்டு மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 20,202 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 47,872 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 74 பேருக்கும், பசுமை வீடுகள் திட்டத்தில் 89 பேருக்கும் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 26 பேருக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 8.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ரூ. 34.91 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 36 பேரூராட்சிகளில் 47 இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 23 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் எண்ணற்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகளும் சகமனிதர்களைப் போல சமூகத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை அவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில், 12 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், 17 பேருக்கு செயற்கை உபகரணங்களும் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில், பள்ளித் தாளாளர் கே.பி.கே. செல்வராஜ், செஞ்சிலுவை சங்க மாநில துணைத் தலைவர் டி.ஏ. பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ். ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ஜான்சன், பார்வையற்றோர் பள்ளி முதல்வர் கிங்ஸ்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment