FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, December 30, 2013

மாற்றுத் திறனாளிகள் 163 பேருக்கு இலவச வீடுகள்: ஆட்சியர்


திருநெல்வேலி, 27 December 2013

திருநெல்வேலி மாவட்டத்தில் 2013-14ஆம் நிதியாண்டில் 163 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவத்தார்.

பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவேன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அவர் பேசியது:

மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில், நிகழாண்டு மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 20,202 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 47,872 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 74 பேருக்கும், பசுமை வீடுகள் திட்டத்தில் 89 பேருக்கும் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 26 பேருக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 8.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ரூ. 34.91 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 36 பேரூராட்சிகளில் 47 இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 23 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் எண்ணற்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகளும் சகமனிதர்களைப் போல சமூகத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை அவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில், 12 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், 17 பேருக்கு செயற்கை உபகரணங்களும் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில், பள்ளித் தாளாளர் கே.பி.கே. செல்வராஜ், செஞ்சிலுவை சங்க மாநில துணைத் தலைவர் டி.ஏ. பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ். ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ஜான்சன், பார்வையற்றோர் பள்ளி முதல்வர் கிங்ஸ்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment