FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, December 12, 2013

மாற்றுத் திறனாளிகள் வளர்ச்சியில் முறைகேடு விவகாரம் – பகிரங்க மன்னிப்புக் கேட்டார் ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் !!

December 11, 2013 - கனடா
மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் இதுவரையிலும் ஒன்ரோறியோ அரசு எடுக்காததும், பல விடயங்களில் அவர்கள் புறந்தள்ளபப்ட்டதும் ஒன்ரோறியோ மாகணத்திற்கும் அரசுக்கும் பெரும் பின்னடைவு என்பது மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் வேதனையளிக்கக் கூடிய விடயம் என்பதால் ஒட்டு மொத்தமாக அனைவரின் சார்பிலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வெய்ன் நேற்று அறிவித்தார்.


ஒன்ரோறியோவின் Orillia பகுதியில் உள்ள Huronia பிராந்திய மையத்தின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக, மாகாணத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட வழக்கில் கடந்த வாரம் ஒரு நீதிபதி, 35 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததையடுத்து முதல்வர் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

1945ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இந்த நெரிசல் மிகுந்த மையத்தில், தினசரி அவமானம் மற்றும் துஷ்பிரயோகத்தைச் சந்தித்த மக்களுக்கு இந்தப் பணம் வழங்கப்படுகிறது. மிகக் குறைந்த அல்லது பணமே பெறாமல் இந்த மையத்தின் வெளிப்புறங்களில் வேலை செய்ததாகவும், தேவையில்லாமல் பேசினால் ஆடைகள் இல்லாமல் அந்த மையத்தை சுற்றி வர வேண்டியது போன்ற தண்டனைகள் அளிக்கப்பட்டதாகவும் வழக்கு விசாரணையின் போது சிலர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment