FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, December 12, 2013

மாற்றுத் திறனாளிகள் வளர்ச்சியில் முறைகேடு விவகாரம் – பகிரங்க மன்னிப்புக் கேட்டார் ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் !!

December 11, 2013 - கனடா
மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் இதுவரையிலும் ஒன்ரோறியோ அரசு எடுக்காததும், பல விடயங்களில் அவர்கள் புறந்தள்ளபப்ட்டதும் ஒன்ரோறியோ மாகணத்திற்கும் அரசுக்கும் பெரும் பின்னடைவு என்பது மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் வேதனையளிக்கக் கூடிய விடயம் என்பதால் ஒட்டு மொத்தமாக அனைவரின் சார்பிலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வெய்ன் நேற்று அறிவித்தார்.


ஒன்ரோறியோவின் Orillia பகுதியில் உள்ள Huronia பிராந்திய மையத்தின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக, மாகாணத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட வழக்கில் கடந்த வாரம் ஒரு நீதிபதி, 35 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததையடுத்து முதல்வர் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

1945ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இந்த நெரிசல் மிகுந்த மையத்தில், தினசரி அவமானம் மற்றும் துஷ்பிரயோகத்தைச் சந்தித்த மக்களுக்கு இந்தப் பணம் வழங்கப்படுகிறது. மிகக் குறைந்த அல்லது பணமே பெறாமல் இந்த மையத்தின் வெளிப்புறங்களில் வேலை செய்ததாகவும், தேவையில்லாமல் பேசினால் ஆடைகள் இல்லாமல் அந்த மையத்தை சுற்றி வர வேண்டியது போன்ற தண்டனைகள் அளிக்கப்பட்டதாகவும் வழக்கு விசாரணையின் போது சிலர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment