FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, December 12, 2013

மாற்றுத் திறனாளிகள் வளர்ச்சியில் முறைகேடு விவகாரம் – பகிரங்க மன்னிப்புக் கேட்டார் ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் !!

December 11, 2013 - கனடா
மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் இதுவரையிலும் ஒன்ரோறியோ அரசு எடுக்காததும், பல விடயங்களில் அவர்கள் புறந்தள்ளபப்ட்டதும் ஒன்ரோறியோ மாகணத்திற்கும் அரசுக்கும் பெரும் பின்னடைவு என்பது மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் வேதனையளிக்கக் கூடிய விடயம் என்பதால் ஒட்டு மொத்தமாக அனைவரின் சார்பிலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வெய்ன் நேற்று அறிவித்தார்.


ஒன்ரோறியோவின் Orillia பகுதியில் உள்ள Huronia பிராந்திய மையத்தின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக, மாகாணத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட வழக்கில் கடந்த வாரம் ஒரு நீதிபதி, 35 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததையடுத்து முதல்வர் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

1945ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இந்த நெரிசல் மிகுந்த மையத்தில், தினசரி அவமானம் மற்றும் துஷ்பிரயோகத்தைச் சந்தித்த மக்களுக்கு இந்தப் பணம் வழங்கப்படுகிறது. மிகக் குறைந்த அல்லது பணமே பெறாமல் இந்த மையத்தின் வெளிப்புறங்களில் வேலை செய்ததாகவும், தேவையில்லாமல் பேசினால் ஆடைகள் இல்லாமல் அந்த மையத்தை சுற்றி வர வேண்டியது போன்ற தண்டனைகள் அளிக்கப்பட்டதாகவும் வழக்கு விசாரணையின் போது சிலர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment