FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, December 12, 2013

மாற்றுத் திறனாளிகள் வளர்ச்சியில் முறைகேடு விவகாரம் – பகிரங்க மன்னிப்புக் கேட்டார் ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் !!

December 11, 2013 - கனடா
மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் இதுவரையிலும் ஒன்ரோறியோ அரசு எடுக்காததும், பல விடயங்களில் அவர்கள் புறந்தள்ளபப்ட்டதும் ஒன்ரோறியோ மாகணத்திற்கும் அரசுக்கும் பெரும் பின்னடைவு என்பது மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் வேதனையளிக்கக் கூடிய விடயம் என்பதால் ஒட்டு மொத்தமாக அனைவரின் சார்பிலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வெய்ன் நேற்று அறிவித்தார்.


ஒன்ரோறியோவின் Orillia பகுதியில் உள்ள Huronia பிராந்திய மையத்தின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக, மாகாணத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட வழக்கில் கடந்த வாரம் ஒரு நீதிபதி, 35 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததையடுத்து முதல்வர் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

1945ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இந்த நெரிசல் மிகுந்த மையத்தில், தினசரி அவமானம் மற்றும் துஷ்பிரயோகத்தைச் சந்தித்த மக்களுக்கு இந்தப் பணம் வழங்கப்படுகிறது. மிகக் குறைந்த அல்லது பணமே பெறாமல் இந்த மையத்தின் வெளிப்புறங்களில் வேலை செய்ததாகவும், தேவையில்லாமல் பேசினால் ஆடைகள் இல்லாமல் அந்த மையத்தை சுற்றி வர வேண்டியது போன்ற தண்டனைகள் அளிக்கப்பட்டதாகவும் வழக்கு விசாரணையின் போது சிலர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment