FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, December 17, 2013

அனைத்துத் துறைகளிலும் சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்

16.12.2013, கடலூர்,

மாற்றுத்திறனாளிகள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர் என்றார் மாவட்டக் கல்வி அலுவலர் மல்லிகா.

தமிழ்நாடு பார்வை - மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கடலூர் பார்வையற்றோர் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடலூர், விழுப்புரம் கிளை மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கடலூர் கிளை துணைத் தலைவர் பாரதிராஜா வரவேற்றார். கடலூர் கல்வி மாவட்ட அலுவலர் மல்லிகா, விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம், விழுப்புரம் ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் பாபு செல்லத்துரை, ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் பாஸ்டினா அந்தோணி செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் மாவட்டக் கல்வி அலுவலர் மல்லிகா பேசியதாவது: மாணவர்களை ஊக்குவிக்கும் போது மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளைத் தான் எடுத்துக் கூறுவோம். மாற்றுத்திறனாளிகள் இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகின்றனர். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தனி சட்டம் இயற்றி பல்வேறு உதவிகள் செய்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பல வெற்றிகள் பெற வேண்டும் என்றார்.

10, 12-ம் வகுப்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Thanks to

No comments:

Post a Comment