FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, December 17, 2013

அனைத்துத் துறைகளிலும் சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்

16.12.2013, கடலூர்,

மாற்றுத்திறனாளிகள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர் என்றார் மாவட்டக் கல்வி அலுவலர் மல்லிகா.

தமிழ்நாடு பார்வை - மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கடலூர் பார்வையற்றோர் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடலூர், விழுப்புரம் கிளை மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கடலூர் கிளை துணைத் தலைவர் பாரதிராஜா வரவேற்றார். கடலூர் கல்வி மாவட்ட அலுவலர் மல்லிகா, விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம், விழுப்புரம் ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் பாபு செல்லத்துரை, ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் பாஸ்டினா அந்தோணி செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் மாவட்டக் கல்வி அலுவலர் மல்லிகா பேசியதாவது: மாணவர்களை ஊக்குவிக்கும் போது மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளைத் தான் எடுத்துக் கூறுவோம். மாற்றுத்திறனாளிகள் இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகின்றனர். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தனி சட்டம் இயற்றி பல்வேறு உதவிகள் செய்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பல வெற்றிகள் பெற வேண்டும் என்றார்.

10, 12-ம் வகுப்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Thanks to

No comments:

Post a Comment