FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, December 12, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மகத்தானது: வி.கே. சுப்புராஜ்

11.12.2013, திருநெல்வேலி
மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கை உறுதி செய்யப்படும் என இந்திய ரசாயனத்துறை செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் தெரிவித்தார்.

ஸ்காட் நிறுவனம் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோர்தா அமைப்புடன் இணைந்து திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி அருகே பொன்னாக்குடி கிராமத்தில் ஸ்காட் மருத்துவம், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.

மருத்துவம், ஆர்தோ அறுவை சிகி்ச்சை, பிசியோதிரபி மையம், பேச்சு பயிற்சி மையம், உடல் இயக்கப்பிரிவு, விளையாட்டு மையம் உள்ளிட்ட 19 பிரிவுகளாக கொண்ட இந்த மறுவாழ்வு மையத்தினை புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய இரசாயனம், உரங்கள்துறை சிறப்பு செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

மையத்தின் பிற அரங்குகளை கோர்தா நிறுவனத் தலைவர் ஜான்காலே, முன்னாள் தலைவர்கள் பேராசிரியர் டெனிஸ் ஐ.எப். லூசி, பேராசிரியர் ஜோசப்ஹெளடன் ஆகியோர் திறந்தனர்.

தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற ஸ்காட் அன்பு இல்ல மாற்றுத் திறனாளி மாணவன் மோகன், தொடர் ஓட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவன் சுப்பையா மற்றும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வி.கே. சுப்புராஜ் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. மாற்றுத்திறனாளிகளின் திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது என்றார் அவர்.

விழாவுக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஏ. ஜூடுபால்ராஜ் தலைமை வகித்தார். ஸ்காட் குழுமத் துணைத் தலைவர் அமலிகிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் கி. அருண்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்காட் குழும நிறுவனத் தலைவர் எஸ். கிளிட்டஸ்பாபு வரவேற்றார்.

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக துணைவேந்தர் இரா. பெருமாள்சாமி வாழ்த்தி பேசினார். ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர்கள் ரா. தம்பித்துரை, கு. பார்த்தீபன், ஸ்காட் நிறுவன மேலாளர் இக்னேசியஸ்சேவியர், பொன்னாக்குடி ஊராட்சித் தலைவர் பி.கே. எம். முருகன், ஆய்க்குடி அமர்சேவா மையத் தலைவர் ராமகிருஷ்ணன், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி நிர்வாகஅலுவலர் கிருஷ்ணகுமார், முதல்வர் கே. ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்காட் கிராம மேம்பாட்டு பணிகள் குழுவின் திட்ட இயக்குநர் ஜி. நாகராஜன் நன்றி கூறினார். 
 மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கை உறுதி செய்யப்படும் என இந்திய ரசாயனத்துறை செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் தெரிவித்தார்.
ஸ்காட் நிறுவனம் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோர்தா அமைப்புடன் இணைந்து திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி அருகே பொன்னாக்குடி கிராமத்தில் ஸ்காட் மருத்துவம், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.

மருத்துவம், ஆர்தோ அறுவை சிகி்ச்சை, பிசியோதிரபி மையம், பேச்சு பயிற்சி மையம், உடல் இயக்கப்பிரிவு, விளையாட்டு மையம் உள்ளிட்ட 19 பிரிவுகளாக கொண்ட இந்த மறுவாழ்வு மையத்தினை புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய இரசாயனம், உரங்கள்துறை சிறப்பு செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

மையத்தின் பிற அரங்குகளை கோர்தா நிறுவனத் தலைவர் ஜான்காலே, முன்னாள் தலைவர்கள் பேராசிரியர் டெனிஸ் ஐ.எப். லூசி, பேராசிரியர் ஜோசப்ஹெளடன் ஆகியோர் திறந்தனர்.

தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற ஸ்காட் அன்பு இல்ல மாற்றுத் திறனாளி மாணவன் மோகன், தொடர் ஓட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவன் சுப்பையா மற்றும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வி.கே. சுப்புராஜ் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. மாற்றுத்திறனாளிகளின் திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது என்றார் அவர்.

விழாவுக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஏ. ஜூடுபால்ராஜ் தலைமை வகித்தார். ஸ்காட் குழுமத் துணைத் தலைவர் அமலிகிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் கி. அருண்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்காட் குழும நிறுவனத் தலைவர் எஸ். கிளிட்டஸ்பாபு வரவேற்றார்.

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக துணைவேந்தர் இரா. பெருமாள்சாமி வாழ்த்தி பேசினார். ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர்கள் ரா. தம்பித்துரை, கு. பார்த்தீபன், ஸ்காட் நிறுவன மேலாளர் இக்னேசியஸ்சேவியர், பொன்னாக்குடி ஊராட்சித் தலைவர் பி.கே. எம். முருகன், ஆய்க்குடி அமர்சேவா மையத் தலைவர் ராமகிருஷ்ணன், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி நிர்வாகஅலுவலர் கிருஷ்ணகுமார், முதல்வர் கே. ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்காட் கிராம மேம்பாட்டு பணிகள் குழுவின் திட்ட இயக்குநர் ஜி. நாகராஜன் நன்றி கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment