FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, December 12, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மகத்தானது: வி.கே. சுப்புராஜ்

11.12.2013, திருநெல்வேலி
மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கை உறுதி செய்யப்படும் என இந்திய ரசாயனத்துறை செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் தெரிவித்தார்.

ஸ்காட் நிறுவனம் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோர்தா அமைப்புடன் இணைந்து திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி அருகே பொன்னாக்குடி கிராமத்தில் ஸ்காட் மருத்துவம், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.

மருத்துவம், ஆர்தோ அறுவை சிகி்ச்சை, பிசியோதிரபி மையம், பேச்சு பயிற்சி மையம், உடல் இயக்கப்பிரிவு, விளையாட்டு மையம் உள்ளிட்ட 19 பிரிவுகளாக கொண்ட இந்த மறுவாழ்வு மையத்தினை புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய இரசாயனம், உரங்கள்துறை சிறப்பு செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

மையத்தின் பிற அரங்குகளை கோர்தா நிறுவனத் தலைவர் ஜான்காலே, முன்னாள் தலைவர்கள் பேராசிரியர் டெனிஸ் ஐ.எப். லூசி, பேராசிரியர் ஜோசப்ஹெளடன் ஆகியோர் திறந்தனர்.

தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற ஸ்காட் அன்பு இல்ல மாற்றுத் திறனாளி மாணவன் மோகன், தொடர் ஓட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவன் சுப்பையா மற்றும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வி.கே. சுப்புராஜ் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. மாற்றுத்திறனாளிகளின் திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது என்றார் அவர்.

விழாவுக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஏ. ஜூடுபால்ராஜ் தலைமை வகித்தார். ஸ்காட் குழுமத் துணைத் தலைவர் அமலிகிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் கி. அருண்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்காட் குழும நிறுவனத் தலைவர் எஸ். கிளிட்டஸ்பாபு வரவேற்றார்.

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக துணைவேந்தர் இரா. பெருமாள்சாமி வாழ்த்தி பேசினார். ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர்கள் ரா. தம்பித்துரை, கு. பார்த்தீபன், ஸ்காட் நிறுவன மேலாளர் இக்னேசியஸ்சேவியர், பொன்னாக்குடி ஊராட்சித் தலைவர் பி.கே. எம். முருகன், ஆய்க்குடி அமர்சேவா மையத் தலைவர் ராமகிருஷ்ணன், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி நிர்வாகஅலுவலர் கிருஷ்ணகுமார், முதல்வர் கே. ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்காட் கிராம மேம்பாட்டு பணிகள் குழுவின் திட்ட இயக்குநர் ஜி. நாகராஜன் நன்றி கூறினார். 
 மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கை உறுதி செய்யப்படும் என இந்திய ரசாயனத்துறை செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் தெரிவித்தார்.
ஸ்காட் நிறுவனம் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோர்தா அமைப்புடன் இணைந்து திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி அருகே பொன்னாக்குடி கிராமத்தில் ஸ்காட் மருத்துவம், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.

மருத்துவம், ஆர்தோ அறுவை சிகி்ச்சை, பிசியோதிரபி மையம், பேச்சு பயிற்சி மையம், உடல் இயக்கப்பிரிவு, விளையாட்டு மையம் உள்ளிட்ட 19 பிரிவுகளாக கொண்ட இந்த மறுவாழ்வு மையத்தினை புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய இரசாயனம், உரங்கள்துறை சிறப்பு செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

மையத்தின் பிற அரங்குகளை கோர்தா நிறுவனத் தலைவர் ஜான்காலே, முன்னாள் தலைவர்கள் பேராசிரியர் டெனிஸ் ஐ.எப். லூசி, பேராசிரியர் ஜோசப்ஹெளடன் ஆகியோர் திறந்தனர்.

தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற ஸ்காட் அன்பு இல்ல மாற்றுத் திறனாளி மாணவன் மோகன், தொடர் ஓட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவன் சுப்பையா மற்றும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வி.கே. சுப்புராஜ் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. மாற்றுத்திறனாளிகளின் திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது என்றார் அவர்.

விழாவுக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஏ. ஜூடுபால்ராஜ் தலைமை வகித்தார். ஸ்காட் குழுமத் துணைத் தலைவர் அமலிகிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் கி. அருண்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்காட் குழும நிறுவனத் தலைவர் எஸ். கிளிட்டஸ்பாபு வரவேற்றார்.

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக துணைவேந்தர் இரா. பெருமாள்சாமி வாழ்த்தி பேசினார். ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர்கள் ரா. தம்பித்துரை, கு. பார்த்தீபன், ஸ்காட் நிறுவன மேலாளர் இக்னேசியஸ்சேவியர், பொன்னாக்குடி ஊராட்சித் தலைவர் பி.கே. எம். முருகன், ஆய்க்குடி அமர்சேவா மையத் தலைவர் ராமகிருஷ்ணன், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி நிர்வாகஅலுவலர் கிருஷ்ணகுமார், முதல்வர் கே. ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்காட் கிராம மேம்பாட்டு பணிகள் குழுவின் திட்ட இயக்குநர் ஜி. நாகராஜன் நன்றி கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment