FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, December 12, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மகத்தானது: வி.கே. சுப்புராஜ்

11.12.2013, திருநெல்வேலி
மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கை உறுதி செய்யப்படும் என இந்திய ரசாயனத்துறை செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் தெரிவித்தார்.

ஸ்காட் நிறுவனம் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோர்தா அமைப்புடன் இணைந்து திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி அருகே பொன்னாக்குடி கிராமத்தில் ஸ்காட் மருத்துவம், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.

மருத்துவம், ஆர்தோ அறுவை சிகி்ச்சை, பிசியோதிரபி மையம், பேச்சு பயிற்சி மையம், உடல் இயக்கப்பிரிவு, விளையாட்டு மையம் உள்ளிட்ட 19 பிரிவுகளாக கொண்ட இந்த மறுவாழ்வு மையத்தினை புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய இரசாயனம், உரங்கள்துறை சிறப்பு செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

மையத்தின் பிற அரங்குகளை கோர்தா நிறுவனத் தலைவர் ஜான்காலே, முன்னாள் தலைவர்கள் பேராசிரியர் டெனிஸ் ஐ.எப். லூசி, பேராசிரியர் ஜோசப்ஹெளடன் ஆகியோர் திறந்தனர்.

தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற ஸ்காட் அன்பு இல்ல மாற்றுத் திறனாளி மாணவன் மோகன், தொடர் ஓட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவன் சுப்பையா மற்றும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வி.கே. சுப்புராஜ் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. மாற்றுத்திறனாளிகளின் திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது என்றார் அவர்.

விழாவுக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஏ. ஜூடுபால்ராஜ் தலைமை வகித்தார். ஸ்காட் குழுமத் துணைத் தலைவர் அமலிகிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் கி. அருண்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்காட் குழும நிறுவனத் தலைவர் எஸ். கிளிட்டஸ்பாபு வரவேற்றார்.

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக துணைவேந்தர் இரா. பெருமாள்சாமி வாழ்த்தி பேசினார். ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர்கள் ரா. தம்பித்துரை, கு. பார்த்தீபன், ஸ்காட் நிறுவன மேலாளர் இக்னேசியஸ்சேவியர், பொன்னாக்குடி ஊராட்சித் தலைவர் பி.கே. எம். முருகன், ஆய்க்குடி அமர்சேவா மையத் தலைவர் ராமகிருஷ்ணன், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி நிர்வாகஅலுவலர் கிருஷ்ணகுமார், முதல்வர் கே. ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்காட் கிராம மேம்பாட்டு பணிகள் குழுவின் திட்ட இயக்குநர் ஜி. நாகராஜன் நன்றி கூறினார். 
 மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கை உறுதி செய்யப்படும் என இந்திய ரசாயனத்துறை செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் தெரிவித்தார்.
ஸ்காட் நிறுவனம் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோர்தா அமைப்புடன் இணைந்து திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி அருகே பொன்னாக்குடி கிராமத்தில் ஸ்காட் மருத்துவம், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.

மருத்துவம், ஆர்தோ அறுவை சிகி்ச்சை, பிசியோதிரபி மையம், பேச்சு பயிற்சி மையம், உடல் இயக்கப்பிரிவு, விளையாட்டு மையம் உள்ளிட்ட 19 பிரிவுகளாக கொண்ட இந்த மறுவாழ்வு மையத்தினை புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய இரசாயனம், உரங்கள்துறை சிறப்பு செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

மையத்தின் பிற அரங்குகளை கோர்தா நிறுவனத் தலைவர் ஜான்காலே, முன்னாள் தலைவர்கள் பேராசிரியர் டெனிஸ் ஐ.எப். லூசி, பேராசிரியர் ஜோசப்ஹெளடன் ஆகியோர் திறந்தனர்.

தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற ஸ்காட் அன்பு இல்ல மாற்றுத் திறனாளி மாணவன் மோகன், தொடர் ஓட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவன் சுப்பையா மற்றும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வி.கே. சுப்புராஜ் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. மாற்றுத்திறனாளிகளின் திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது என்றார் அவர்.

விழாவுக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஏ. ஜூடுபால்ராஜ் தலைமை வகித்தார். ஸ்காட் குழுமத் துணைத் தலைவர் அமலிகிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் கி. அருண்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்காட் குழும நிறுவனத் தலைவர் எஸ். கிளிட்டஸ்பாபு வரவேற்றார்.

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக துணைவேந்தர் இரா. பெருமாள்சாமி வாழ்த்தி பேசினார். ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர்கள் ரா. தம்பித்துரை, கு. பார்த்தீபன், ஸ்காட் நிறுவன மேலாளர் இக்னேசியஸ்சேவியர், பொன்னாக்குடி ஊராட்சித் தலைவர் பி.கே. எம். முருகன், ஆய்க்குடி அமர்சேவா மையத் தலைவர் ராமகிருஷ்ணன், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி நிர்வாகஅலுவலர் கிருஷ்ணகுமார், முதல்வர் கே. ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்காட் கிராம மேம்பாட்டு பணிகள் குழுவின் திட்ட இயக்குநர் ஜி. நாகராஜன் நன்றி கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment