FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, December 4, 2013

உரிமைகள் மறுக்கப்படும் போது மாற்றுத்திறனாளிகள் நீதிமன்றத்தை அணுகலாம் மாவட்ட நீதிபதி அறிவுறுத்தல்


04.12.2013, திருச்சி, :
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது அதற்காக நீதிமன்றத்தை அணுகலாம் என்று திருச்சி மாவட்ட நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்துப் பேசுகை யில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான நீதிபதி வேல்முருகன் தலைமை வகித்து பேசுகையில், ‘அனைவரும் மாற்றுத்திறனாளிகளை சமமாக கருத வேண்டும். அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட தவறினால் ஏற்பட்டது இல்லை. 6 முதல் 12 வயது வரையுள்ள அனைவருக்கும் கட்டாய கல்வி என அரசு அறிவித்துள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். மாற்றுத்திறனாளிகளை பிரித்து பார்க் கக் கூடாது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்க வேண்டும். அனைவருக்கும் சமமாக போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது நீதிமன்றத்தை அணுகலாம். பொருளாதார சூழல் இல்லை என்றாலும், இவர்களுக்கு உதவிட சட்ட உதவி மையம் உள்ளது. அனைத்து மாநகர் மற்றும் தாலுகாக்களில் மாவட்ட சட்டப் பணிகள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என் றார்.
விழாவில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயலாளர் நீதிபதி பார்த்தசாரதி, நிர்வாக முதன்மை அலுவலர் தனபால், விமானப் படை அதிகாரி தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பிஷப் ஹீபர், ஜமால் முகமது, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த என்சிசி மற்றும் மாணவர் படையினர் பங்கேற்ற பேரணியை நீதிபதி வேல்முருகன் கொடியசைத்துத் துவக்கிவைத்தார். இந்த பேரணி புத்தூர் முக்கிய சாலைகள் வழியாக பிஷப் ஹீபர் கல்லூரியை மீண்டும் சென்றடைந்தது.

Thanks to

No comments:

Post a Comment