FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, December 26, 2013

எட்டு ஆண்டுகளாய் ஏமாந்த மாற்றுத்திறனாளிகள்

26.12.2013, சென்னை:
பஸ்களில் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கக் கூடாது என, எட்டு ஆண்டுக்கு முன், உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், அதை போக்குவரத்து கழகங்கள், பின்பற்றாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. அரசு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என, போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தும், சுமை கட்டணம் வசூலிப்பதை, நடத்துனர்கள் கட்டாயமாக்கி வருகின்றனர். இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில செயலர், நம்புராஜன் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கக் கூடாது என, 2005ம் ஆண்டு, டிச., 29ம் தேதி, அப்போது போக்குவரத்து துறை செயலராக இருந்த சண்முகம், அனைத்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இருந்தும், எட்டு ஆண்டுகளாக, கழகங்கள் இதை பின்பற்றாமல் இருந்துள்ளன. இந்த உத்தரவு விவரத்தை, மாற்றுத் திறனாளி பிரதிநிதிகளிடம், நேற்று தான் போக்குவரத்து துறை அதிகாரிகள் அளித்துள்ளனர். உத்தரவு விவரத்தை, நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு தெரிவிப்பதுடன், பஸ் நிலையங்களில் அறிவிப்பு பலகையாகவும் வைப்பதற்கு, போக்குவரத்து மற்றும் மாற்றுத் திறனாளி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment