FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, December 26, 2013

எட்டு ஆண்டுகளாய் ஏமாந்த மாற்றுத்திறனாளிகள்

26.12.2013, சென்னை:
பஸ்களில் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கக் கூடாது என, எட்டு ஆண்டுக்கு முன், உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், அதை போக்குவரத்து கழகங்கள், பின்பற்றாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. அரசு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என, போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தும், சுமை கட்டணம் வசூலிப்பதை, நடத்துனர்கள் கட்டாயமாக்கி வருகின்றனர். இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில செயலர், நம்புராஜன் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கக் கூடாது என, 2005ம் ஆண்டு, டிச., 29ம் தேதி, அப்போது போக்குவரத்து துறை செயலராக இருந்த சண்முகம், அனைத்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இருந்தும், எட்டு ஆண்டுகளாக, கழகங்கள் இதை பின்பற்றாமல் இருந்துள்ளன. இந்த உத்தரவு விவரத்தை, மாற்றுத் திறனாளி பிரதிநிதிகளிடம், நேற்று தான் போக்குவரத்து துறை அதிகாரிகள் அளித்துள்ளனர். உத்தரவு விவரத்தை, நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு தெரிவிப்பதுடன், பஸ் நிலையங்களில் அறிவிப்பு பலகையாகவும் வைப்பதற்கு, போக்குவரத்து மற்றும் மாற்றுத் திறனாளி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment