FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, December 26, 2013

எட்டு ஆண்டுகளாய் ஏமாந்த மாற்றுத்திறனாளிகள்

26.12.2013, சென்னை:
பஸ்களில் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கக் கூடாது என, எட்டு ஆண்டுக்கு முன், உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், அதை போக்குவரத்து கழகங்கள், பின்பற்றாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. அரசு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என, போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தும், சுமை கட்டணம் வசூலிப்பதை, நடத்துனர்கள் கட்டாயமாக்கி வருகின்றனர். இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில செயலர், நம்புராஜன் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கக் கூடாது என, 2005ம் ஆண்டு, டிச., 29ம் தேதி, அப்போது போக்குவரத்து துறை செயலராக இருந்த சண்முகம், அனைத்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இருந்தும், எட்டு ஆண்டுகளாக, கழகங்கள் இதை பின்பற்றாமல் இருந்துள்ளன. இந்த உத்தரவு விவரத்தை, மாற்றுத் திறனாளி பிரதிநிதிகளிடம், நேற்று தான் போக்குவரத்து துறை அதிகாரிகள் அளித்துள்ளனர். உத்தரவு விவரத்தை, நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு தெரிவிப்பதுடன், பஸ் நிலையங்களில் அறிவிப்பு பலகையாகவும் வைப்பதற்கு, போக்குவரத்து மற்றும் மாற்றுத் திறனாளி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment