FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, December 19, 2013

மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை தற்காலிக நிறுத்தம் ஏன்? அதிகாரி விளக்கம்

19.12.2013 கோவை மாவட்டத்தில், மனவளர்ச்சிகுன்றிய மாற்று திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை தற்காலிக நிறுத்தம் ஏன்? என்பதற்கு அதிகாரி விளக்கம் அளித்தார்.

32 ஆயிரம் மாற்று திறனாளிகள்

கோவை மாவட்டத்தில் சுமார் 32ஆயிரம் மாற்று திறனாளிகள் உள்ளனர். இதில் கடும்பாதிப்புக்குள்ளான (ஊனத்தின் அளவு 75 சதவீதத்துக்கு மேல்) நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

இது தவிர மனவளர்ச்சி குறைபாடு (45 சதவீதத்துக்கு மேல்) உடைய தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கும், தசை சிதைவு நோயால் (40 சதவீதத்துக்கு மேல்) பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

உதவித்தொகை

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மன வளர்ச்சி குன்றியவர்களில் மொத்தம் 2641 பேர் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக உதவித்தொகை வழங்காமல் உள்ளது. இதனால் மனவளர்ச்சி குன்றியவர்களை பராமரிக்கும் பெற்றோர்கள் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து அதிகாரியிடம் கேட்டபோது, மாதாந்திர உதவித்தொகை பெறும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் மட்டும் உதவித்தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு காரணம் அவர்களுக்கு உரிய வாழ்வுச்சான்றிதழ் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் இருந்து பெற வேண்டி இருந்தது.

தடையில்லாமல் கிடைக்கும்
அதாவது உதவித்தொகை பெறும் மன வளர்ச்சி குன்றிய நபர்கள் உயிருடன் இருக்கிறார்களா? அவர்கள் இறந்து போன நிலையில் அவர்களின் பெயரை சொல்லி உதவித்தொகை தவறாக பெறப்படுகிறதா? என்பது குறித்த கணக்கெடுப்புக்காக அரசு உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அதற்கான தகவல்கள் பெறப்பட்டு உள்ளது. ஆகவே ஏற்கனவே நிலுவையில் இருந்த உதவித்தொகையுடன் இனிமேல் மாதந்தோறும் உதவித்தொகை தடையில்லாமல் கிடைக்கும்.

தேசிய அடையாள அட்டை
இது தவிர மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை அவசியம். ஆகவே அதற்காக ரேஷன் கார்டு நகல், அல்லது இருப்பிட சான்று, புகைப்படம் (இரண்டு) ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் இருக்கின்ற நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டை பெற்றிருக்கும் மாற்று திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியத்துடன் வழங்கப்படும்.

வங்கிக்கடன்
இவர்கள் ஏற்கனவே வங்கிகளில் கடன்பெற்று நிலுவை தொகை இல்லாதவராக இருக்க வேண்டும். இது தவிர கல்வி உதவித்தொகை ரூ.1000-ம், திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இரண்டு கால்களும் செயல் இழந்த 18 வயது பூர்த்தியானவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. இதில் மாணவ-மாணவிகளாக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment