FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, December 28, 2013

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை வழங்குவதில் தாமதம்

விருதுநகர் ,28 December 2013,
விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை இதுவரையில் வழங்கப்படாமல் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நடக்க முடியாதவர்கள், கை கால் செயலிழந்தவர்கள், பணி செய்ய முடியாதவர்கள், தசை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதித்தவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் உள்ளிட்ட தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், கடும் ஊனமுற்றோர் 100 பேர், மனவளர்ச்சி குன்றியோர் 400 பேர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் 70 பேர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 60 பேர் என மொத்தம் 4630 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகையை வைத்து பெற்றோர் அல்லது உறவினர்கள் பராமரிப்பில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்த ஆண்டில் 8 மாதங்கள் வரையில் குறிப்பிட்ட நாளில் வழங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாக உரிய நாளில் தொகை வழங்கப்படவில்லையாம்.

இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், கடந்தாண்டு வரையில் ஒரு ஆண்டுக்கான தொகையை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வங்கி கிளைகளுக்கு பணம் விடுவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நிகழாண்டு முதல் அந்தந்த மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் சரிபார்த்து கருவூலத்திற்கு பட்டியல் அனுப்பி, அங்கிருந்து பணத்தை பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த மாதம் வரையில் பில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் விடுப்பில் சென்றுள்ளார். அதனால் தாமதம் ஆனாது.

தற்போது, பொறுப்பு அதிகாரி சரி பார்த்து மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பபட்டுள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமைக்குள் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும்.

தொழுநோயாளிகளுக்கான உதவித் தொகை அரசிடம் இருந்து வரவில்லையெனவும் தெரிவித்தார்.

Thanks to

No comments:

Post a Comment