FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, December 28, 2013

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை வழங்குவதில் தாமதம்

விருதுநகர் ,28 December 2013,
விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை இதுவரையில் வழங்கப்படாமல் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நடக்க முடியாதவர்கள், கை கால் செயலிழந்தவர்கள், பணி செய்ய முடியாதவர்கள், தசை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதித்தவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் உள்ளிட்ட தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், கடும் ஊனமுற்றோர் 100 பேர், மனவளர்ச்சி குன்றியோர் 400 பேர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் 70 பேர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 60 பேர் என மொத்தம் 4630 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகையை வைத்து பெற்றோர் அல்லது உறவினர்கள் பராமரிப்பில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்த ஆண்டில் 8 மாதங்கள் வரையில் குறிப்பிட்ட நாளில் வழங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாக உரிய நாளில் தொகை வழங்கப்படவில்லையாம்.

இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், கடந்தாண்டு வரையில் ஒரு ஆண்டுக்கான தொகையை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வங்கி கிளைகளுக்கு பணம் விடுவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நிகழாண்டு முதல் அந்தந்த மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் சரிபார்த்து கருவூலத்திற்கு பட்டியல் அனுப்பி, அங்கிருந்து பணத்தை பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த மாதம் வரையில் பில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் விடுப்பில் சென்றுள்ளார். அதனால் தாமதம் ஆனாது.

தற்போது, பொறுப்பு அதிகாரி சரி பார்த்து மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பபட்டுள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமைக்குள் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும்.

தொழுநோயாளிகளுக்கான உதவித் தொகை அரசிடம் இருந்து வரவில்லையெனவும் தெரிவித்தார்.

Thanks to

No comments:

Post a Comment