FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, August 20, 2014

வங்கியை முற்றுகையிட முயற்சி: 50 மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை,  19 August 2014
மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களை அலைக்கழித்த வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து, வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழங்கும் ராஜீவ் காந்தி தேசியக் கல்வி உதவித்தொகையை விடுவிக்க மறுத்ததோடு, மாணவர்களை அலைக்கழித்ததாக திருவல்லிக்கேணி கனரா வங்கி கிளை மீது புகார் எழுந்தது.

வங்கி நிர்வாகிகளின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு மாற்றித்திறனாளிகள் சம்மேளனம் சார்பில் தேனாம்பேட்டையில் உள்ள கனரா வங்கி வட்ட அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காலை போராட்டம் நடத்தப்பட்டது.

அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆராய்ச்சி உதவித்தொகைகள் உள்ளிட்ட பிற உதவித்தொகைகளை விடுவிக்க, வங்கிகள் தயக்கம் காட்டக் கூடாது, வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்றுவரும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர், வங்கி வட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.

சமூகநலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment