FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, August 20, 2014

வங்கியை முற்றுகையிட முயற்சி: 50 மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை,  19 August 2014
மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களை அலைக்கழித்த வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து, வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழங்கும் ராஜீவ் காந்தி தேசியக் கல்வி உதவித்தொகையை விடுவிக்க மறுத்ததோடு, மாணவர்களை அலைக்கழித்ததாக திருவல்லிக்கேணி கனரா வங்கி கிளை மீது புகார் எழுந்தது.

வங்கி நிர்வாகிகளின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு மாற்றித்திறனாளிகள் சம்மேளனம் சார்பில் தேனாம்பேட்டையில் உள்ள கனரா வங்கி வட்ட அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காலை போராட்டம் நடத்தப்பட்டது.

அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆராய்ச்சி உதவித்தொகைகள் உள்ளிட்ட பிற உதவித்தொகைகளை விடுவிக்க, வங்கிகள் தயக்கம் காட்டக் கூடாது, வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்றுவரும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர், வங்கி வட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.

சமூகநலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment