FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, August 26, 2014

இலவச வீட்டு மனை கேட்டு கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் மறியல்

27.08.2014, மதுரை, :
இலவச வீட்டு மனை கேட்டு மது ரை கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட காசி பார்வையற்றோர், உடல் குன்றியவர்கள் அமைப்பில் 150க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ள னர். இதன் சார்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டு மனை கேட்டு கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் அலுவலர், மேயர் ஆகியோரிடம் மனு அளித்தனர். ஆனால் இது வரை நடவடிக்கை இல்லை. மேலும் இந்த அமைப்பினர், தங்கள் கோரிக்கை மனு குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அமைச்சரிடம் கடிதம் வாங்கி வந்தால் வீட்டு மனைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர் ந்து அமைச்சரிடம் கடிதம் பெற்று அதனை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். இருப்பினும் இதுவரை மனு மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனைக் கண்டித்து இந்த அமைப்பைச் சேர்ந்த 25 பெண்கள் உள்பட 50 பேர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர் பாக ஆர்டிஓ ஆறுமுக நயி னார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந் தலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கலெக்டர் தங்களு டன் நேரடியாக பேசினால் தான் மறியலை கைவிடு வோம் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் கூறி தொடர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அமைப் பின் பிரதிநிதிகள் கலெக் டரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கலெக்டரிடம் அவர்கள் மீண்டும் கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இதே போன்று மனு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த மேயரிடம் வழங்கினர்.
அதிகாரிகள் செய்த சமரசத்தை ஏற்று சுமார் 2 மணி நேரமாக நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் கலெக்டர் அலு வலக ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment