FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, August 26, 2014

இலவச வீட்டு மனை கேட்டு கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் மறியல்

27.08.2014, மதுரை, :
இலவச வீட்டு மனை கேட்டு மது ரை கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட காசி பார்வையற்றோர், உடல் குன்றியவர்கள் அமைப்பில் 150க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ள னர். இதன் சார்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டு மனை கேட்டு கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் அலுவலர், மேயர் ஆகியோரிடம் மனு அளித்தனர். ஆனால் இது வரை நடவடிக்கை இல்லை. மேலும் இந்த அமைப்பினர், தங்கள் கோரிக்கை மனு குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அமைச்சரிடம் கடிதம் வாங்கி வந்தால் வீட்டு மனைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர் ந்து அமைச்சரிடம் கடிதம் பெற்று அதனை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். இருப்பினும் இதுவரை மனு மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனைக் கண்டித்து இந்த அமைப்பைச் சேர்ந்த 25 பெண்கள் உள்பட 50 பேர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர் பாக ஆர்டிஓ ஆறுமுக நயி னார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந் தலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கலெக்டர் தங்களு டன் நேரடியாக பேசினால் தான் மறியலை கைவிடு வோம் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் கூறி தொடர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அமைப் பின் பிரதிநிதிகள் கலெக் டரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கலெக்டரிடம் அவர்கள் மீண்டும் கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இதே போன்று மனு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த மேயரிடம் வழங்கினர்.
அதிகாரிகள் செய்த சமரசத்தை ஏற்று சுமார் 2 மணி நேரமாக நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் கலெக்டர் அலு வலக ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment