FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, August 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு கணினி, பைண்டிங் பயிற்சி

 
மாற்றுத் திறன் மாணவர்களுக்கு அளிக்கப்படும் இலவச தொழில் பயிற்சிகள் குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

# சென்னை, திருச்சி, மதுரை உட்பட தமிழகத்தில் 12 இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்ப பட்டயப் பயிற்சி அளிக்கப்படுவதாக நேற்று பார்த்தோம். இப்பயிற்சியில் சேர்வதற்கான நிபந்தனைகள் என்ன?
கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத் திறனாளிகள் பிளஸ்2 பொதுத் தேர்வில் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வுக் கூடத்தில் தன்னிச்சையாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் திறன் இருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும்போது தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, மேல்நிலை வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

# கைபேசி பழுது பார்க்கும் பயிற்சி எந்தவிதமான மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படுகிறது?
கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக் காலம் 3 மாதங்கள். அனைத்து மாவட்டங்களிலும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.300 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 

# கைபேசி பழுது பார்க்கும் பயிற்சியில் சேர கல்வித் தகுதி என்ன?
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் இதில் பயன் பெறலாம். பயிற்சி மையத்தின் உள்ளே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தன்னிச்சையாக செல்லும் திறன் வேண்டும். இதில் சேர விண்ணப்பிக்கும்போது தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, 10-ம் வகுப்பு கல்விச் சான்று நகல் இணைக்க வேண்டும். 

# இலவச கணினிப் பயிற்சி யாருக்கு அளிக்கப்படுகிறது?
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையம் சென்னை பூவிருந்தவல்லியில் உள்ளது. இங்கு மாதம் ரூ.300 உதவித் தொகையுடன் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு பிளஸ்2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பிளஸ்2 சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். 

# பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறதா?
சென்னையில் ஓராண்டு பைண்டிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச தங்கும் விடுதி, உணவு வசதி, சீருடை வழங்கப்படுகிறது. இதில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 

No comments:

Post a Comment