FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, August 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு கணினி, பைண்டிங் பயிற்சி

 
மாற்றுத் திறன் மாணவர்களுக்கு அளிக்கப்படும் இலவச தொழில் பயிற்சிகள் குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

# சென்னை, திருச்சி, மதுரை உட்பட தமிழகத்தில் 12 இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்ப பட்டயப் பயிற்சி அளிக்கப்படுவதாக நேற்று பார்த்தோம். இப்பயிற்சியில் சேர்வதற்கான நிபந்தனைகள் என்ன?
கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத் திறனாளிகள் பிளஸ்2 பொதுத் தேர்வில் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வுக் கூடத்தில் தன்னிச்சையாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் திறன் இருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும்போது தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, மேல்நிலை வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

# கைபேசி பழுது பார்க்கும் பயிற்சி எந்தவிதமான மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படுகிறது?
கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக் காலம் 3 மாதங்கள். அனைத்து மாவட்டங்களிலும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.300 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 

# கைபேசி பழுது பார்க்கும் பயிற்சியில் சேர கல்வித் தகுதி என்ன?
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் இதில் பயன் பெறலாம். பயிற்சி மையத்தின் உள்ளே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தன்னிச்சையாக செல்லும் திறன் வேண்டும். இதில் சேர விண்ணப்பிக்கும்போது தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, 10-ம் வகுப்பு கல்விச் சான்று நகல் இணைக்க வேண்டும். 

# இலவச கணினிப் பயிற்சி யாருக்கு அளிக்கப்படுகிறது?
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையம் சென்னை பூவிருந்தவல்லியில் உள்ளது. இங்கு மாதம் ரூ.300 உதவித் தொகையுடன் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு பிளஸ்2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பிளஸ்2 சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். 

# பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறதா?
சென்னையில் ஓராண்டு பைண்டிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச தங்கும் விடுதி, உணவு வசதி, சீருடை வழங்கப்படுகிறது. இதில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 

No comments:

Post a Comment