FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, August 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை

 காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி, சுய தொழில் தொடங்க வழங்கப்படும் வங்கிக் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு இல்லாதோர் நிவாரண உதவித் தொகை உள்ளிட்டவை குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அரசு அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர். 

காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறதா?
ஆம். காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஃபிட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது 2 ஆண்டுப் பயிற்சியாகும். பயிற்சி வகுப்பில் சேர்பவர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.300 வழங்கப்படுகிறது. 

இப்பயிற்சியில் சேர அடிப்படை கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம். காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் ஃபிட்டர் பயிற்சியில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகள் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், வயதுக்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

மாற்றுத் திறனாளிகள் சுய தொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்கப்படுகிறதா?
மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற பரிந்துரை செய்யப்படுகிறது. வங்கிக் கடனில் மூன்றில் ஒரு பங்கு மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

என்ன சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் வழங்கப் படுகிறது?
பெட்டிக்கடை வைக்க வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகை யில் மூன்றில் ஒரு பங்கு மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும்போது பொருட்களின் விலைப்பட்டியலை இணைத்து வழங்க வேண்டும். 

வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான நிவாரண உதவித் தொகை மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்படுகிறதா?
ஆம். மாதாந்திர உதவித் தொகையாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களுக்கு ரூ.300, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.375, பட்டப் படிப்பு மற்றும் அதற்கு மேல் தகுதியுள்ளவர்களுக்கு ரூ.450 வழங்கப்படுகிறது. இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து ஓராண்டாகி இருக்க வேண்டும்.
இந்த உதவித் தொகையைப் பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு பதிவு அட்டை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

No comments:

Post a Comment