FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, August 10, 2014

வாய் பேச முடியாத வாலிபர் திடீரென பேசிய அதிசயம்

10.08.2014, திருமலை:
பிறவியிலேயே வாய் பேச முடியாமல் இருந்த லண்டனை சேர்ந்த பக்தருக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சு வந்தது. திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது இந்த அதிசயம் நடந்தது. டெல்லியை சேர்ந்தவர் பிரத்தீமா. இவரது மகன் தீபக் (18). இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். மேலும், பிரத்தீமாவுக்கு பூஜா என்ற மகளும் உள்ளார். பிரத்தீமா தனது குடும்பத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் குடியேறினர். நேற்று முன்தினம் இவர் குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். ஸி300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், மூலவர் சன்னதியில் இருந்து வகுலமாதா சன்னதிக்கு வந்தனர். அப்போது, தீபக் திடீரென பக்தி பரவசத்தில் Ôகோவிந்தா... கோவிந்தாÕ என கோஷமிட்டார்.

அதை சற்றும் எதிர்பாராத பெற்றோர், தங்கள் மகன் திடீரென பேசுவதை பார்த்து சில நொடிகள் திகைத்தனர். இந்த தகவல் கோயிலுக்கு வந்த பக்தர்களிடையே பரவியது. ஏழுமலையானின் அருளால் அற்புதம் நடந்துள்ளதாக பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பிரத்தீமா குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் கோயில் சார்பில் பிரசாதம், சுவாமி படங்களையும் வழங்கினர். பிரத்தீமா கூறியதாவது: தீபக்கிற்கு பிறவியில் இருந்தே வாய் பேச முடியாது. வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்தால் பக்தர்கள் குறைகளை தீர்த்து வைப்பார் என கூறினர். இதனால், 2002ம் ஆண்டு ஏழுமலையான் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தோம். அப்போது, எனது மகனுக்கு பேசும் சக்தியை கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டினேன். லண்டனில் தீபக்கிற்கு பேச்சு வருவதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் சரியான முறையில் பேச்சு வராமல் இருந்தது.

அவன் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே உச்சரித்து வந்தான். இன்று திருப்பதி கோயிலில் வெங்டேஸ்வர சுவாமியை தரிசனம் செய்த பிறகு, ‘கோவிந்தா கோவிந்தாÕ என பேசினான். இது கடவுள் அருளால் எனக்கு கிடைத்த வரம். இவ்வாறு பிரத்தீமா கூறினார். திருப்பதி கோயிலில் பேச்சு வந்ததை தொடர்ந்து, தனது தாயார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளிடம் தீபக் மகிழ்ச்சியோடு பேசினார். அவர் கூறுகையில், ‘‘இதுவரை பேச முடியாமல் இருந்தேன். தற்போது சுவாமியின் அருளால் என்னால் பேச முடிகிறது’’ என ஆங்கிலத்தில் கூறிவிட்டு மீண்டும் ‘கோவிந்தா... கோவிந்தா’ என கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினார்.

No comments:

Post a Comment