FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, August 10, 2014

வாய் பேச முடியாத வாலிபர் திடீரென பேசிய அதிசயம்

10.08.2014, திருமலை:
பிறவியிலேயே வாய் பேச முடியாமல் இருந்த லண்டனை சேர்ந்த பக்தருக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சு வந்தது. திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது இந்த அதிசயம் நடந்தது. டெல்லியை சேர்ந்தவர் பிரத்தீமா. இவரது மகன் தீபக் (18). இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். மேலும், பிரத்தீமாவுக்கு பூஜா என்ற மகளும் உள்ளார். பிரத்தீமா தனது குடும்பத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் குடியேறினர். நேற்று முன்தினம் இவர் குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். ஸி300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், மூலவர் சன்னதியில் இருந்து வகுலமாதா சன்னதிக்கு வந்தனர். அப்போது, தீபக் திடீரென பக்தி பரவசத்தில் Ôகோவிந்தா... கோவிந்தாÕ என கோஷமிட்டார்.

அதை சற்றும் எதிர்பாராத பெற்றோர், தங்கள் மகன் திடீரென பேசுவதை பார்த்து சில நொடிகள் திகைத்தனர். இந்த தகவல் கோயிலுக்கு வந்த பக்தர்களிடையே பரவியது. ஏழுமலையானின் அருளால் அற்புதம் நடந்துள்ளதாக பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பிரத்தீமா குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் கோயில் சார்பில் பிரசாதம், சுவாமி படங்களையும் வழங்கினர். பிரத்தீமா கூறியதாவது: தீபக்கிற்கு பிறவியில் இருந்தே வாய் பேச முடியாது. வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்தால் பக்தர்கள் குறைகளை தீர்த்து வைப்பார் என கூறினர். இதனால், 2002ம் ஆண்டு ஏழுமலையான் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தோம். அப்போது, எனது மகனுக்கு பேசும் சக்தியை கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டினேன். லண்டனில் தீபக்கிற்கு பேச்சு வருவதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் சரியான முறையில் பேச்சு வராமல் இருந்தது.

அவன் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே உச்சரித்து வந்தான். இன்று திருப்பதி கோயிலில் வெங்டேஸ்வர சுவாமியை தரிசனம் செய்த பிறகு, ‘கோவிந்தா கோவிந்தாÕ என பேசினான். இது கடவுள் அருளால் எனக்கு கிடைத்த வரம். இவ்வாறு பிரத்தீமா கூறினார். திருப்பதி கோயிலில் பேச்சு வந்ததை தொடர்ந்து, தனது தாயார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளிடம் தீபக் மகிழ்ச்சியோடு பேசினார். அவர் கூறுகையில், ‘‘இதுவரை பேச முடியாமல் இருந்தேன். தற்போது சுவாமியின் அருளால் என்னால் பேச முடிகிறது’’ என ஆங்கிலத்தில் கூறிவிட்டு மீண்டும் ‘கோவிந்தா... கோவிந்தா’ என கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினார்.

No comments:

Post a Comment