FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, August 18, 2014

ஜயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 ஜயங்கொண்டம், 15 August 2014
மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 15 மாதங்களாக வழங்கப்படாத உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அரியலூர் மாவட்டத் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். செயலர் அடைக்கலசாமி, பொருளாளர் அமீர்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இதில் ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருப்பின் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட துணைத் தலைவர் குழந்தைவேல், துணைச் செயலர் அம்பிகாபதி, சிங்காரவேலன், பவித்ரா, சுகந்தி, தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment