FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, August 20, 2014

குடிசைமாற்று வாரிய வீடுகள் குலுக்கல் முறையில் தேர்வான மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு

20.08.2014, திருச்சி, : தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீடு கள் கலெக்டர் முன்னிலை யில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பு அகற்றால் பாதிக்கப்படுவோர்களுக் கும், தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிப்புக்குள்ளாகும் குடிசை பகுதிகளில் வசிக் கும் ஏழை, எளிய மக்களு க்கும் இந்த வீடுகள் ஒதுக் கீடு செய்யப்படுகின்றன.

அதன்படி, ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட நாகமங்கலம் கிராமத்தில் ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் 683 அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளில் தவணை தொகையை தொடர்ந்து செலுத்தாத காரணத்தால் 8 குடியிருப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

தற்சமயம் காலியாக உள்ள 8 குடியிருப்புகளு க்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 34 விண்ணப்பங் கள் பெறப்பட்டன.
இவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கலெக் டர் ஜெய ஸ்ரீ முன்னிலையில் நேற்று குலுக்கல் முறையில் 8 மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு குடியிருப்புக் கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் சுரேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமர்த், உதவி இயக்குநர் முத்துசாமி மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment