FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, August 20, 2014

குடிசைமாற்று வாரிய வீடுகள் குலுக்கல் முறையில் தேர்வான மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு

20.08.2014, திருச்சி, : தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீடு கள் கலெக்டர் முன்னிலை யில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பு அகற்றால் பாதிக்கப்படுவோர்களுக் கும், தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிப்புக்குள்ளாகும் குடிசை பகுதிகளில் வசிக் கும் ஏழை, எளிய மக்களு க்கும் இந்த வீடுகள் ஒதுக் கீடு செய்யப்படுகின்றன.

அதன்படி, ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட நாகமங்கலம் கிராமத்தில் ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் 683 அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளில் தவணை தொகையை தொடர்ந்து செலுத்தாத காரணத்தால் 8 குடியிருப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

தற்சமயம் காலியாக உள்ள 8 குடியிருப்புகளு க்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 34 விண்ணப்பங் கள் பெறப்பட்டன.
இவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கலெக் டர் ஜெய ஸ்ரீ முன்னிலையில் நேற்று குலுக்கல் முறையில் 8 மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு குடியிருப்புக் கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் சுரேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமர்த், உதவி இயக்குநர் முத்துசாமி மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment