FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, August 21, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பகங்கள்

20.08.2014,
தமிழகத்தில் இந்த ஆண்டில் 1 லட்சத்து 5,829 மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 81ஆயிரத்து 586 பேர் உறுப்பு நலம் குன்றியவர்கள். 12 ஆயிரத்து 539 பேர் பார்வைத்திறன் இழந்தவர்கள். 11 ஆயிரத்து 704 பேர் செவித்திறன் குறைந்தவர்கள்.

இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகச் சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம் ஒன்று சென்னையில், கிண்டியில் செயல்பட்டு வருகின்றது.

அந்த வேலைவாய்ப்பகத்தின் கிளைகள் தமிழகத்தின் மாவட்டங்களான கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர், மதுரை, நாகர்கோவில், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், உதகமண்டலம், திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய 13 இடங்களில் செயல்படுகின்றன.

இவை மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்தம் செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்விற்காக முயற்சிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை செய்து வருகின்றன.

No comments:

Post a Comment