FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, August 4, 2014

செவித்திறன் பாதிக்கப்பட்டவர் பட்டப் படிப்பு படிக்க முடியுமா?

பார்வையற்றவர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறன் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர். 

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், வாசிப்பாளர் உதவித் தொகை பெறுவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? இந்த உதவித் தொகையைப் பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
பார்வையற்ற மாற்றுத் திறன் மாணவர்கள், வாசிப்பாளருக்கான உதவித் தொகையைப் பெற அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன முதல்வரின் சான்று, தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, முந்தைய ஆண்டுத் தேர்வின் மதிப்பெண் பட்டியல் நகல்கள் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 

வழக்கமான உதவித் தொகை தவிர, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் வாசிப்பாளர்களுக்கு தேர்வு எழுதுவதற்கென பிரத்தியேகமாக உதவித் தொகை ஏதேனும் வழங்கப்படுகிறதா?
வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வாய் மூலம் அளிக்கும் பதிலுக்கு உதவியாளர்கள் தேர்வு எழுதுவர். அவர்களுக்கு தேர்வுத்தாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் பெற வேண்டும். 

செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவி அளிக்கப்படுகிறதா?
பிறவியிலேயே செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் பேச இயலாது. இதுபோன்ற மாற்றுதிறன் கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கு இலவச விடுதி, உணவு வசதியுடன் கூடிய முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. 3 முதல் 5 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் இதற்குத் தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கான விண்ணப்பத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தவிர, அனைத்து விதமான அரசு உதவிகளையும் பெறுவதற்கு அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். 

செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பட்டப்படிப்பு படிக்க முடியுமா?
செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநிலக் கல்லூரியில் 2007-08ம் கல்வியாண்டில் பி.காம்., பி.சி.ஏ. பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன. பட்டப்படிப்பு படிக்க விரும்பும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறன் மாணவ, மாணவிகள் அங்கு படிக்கலாம். 

No comments:

Post a Comment