FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, August 21, 2014

அரசுப் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு: முறைப்படுத்த வேண்டுகோள்

சென்னை, 20 August 2014
அரசுப் பணிகளில் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் செயலாளர் ஆனந்த் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முதுநிலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள், இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களில் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பின்னர், அதுதொடர்பான அரசாணை டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அவற்றில் முழுவிவரங்கள் இடம்பெறவில்லை. இது பார்வையற்ற பட்டதாரி மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

அரசுத் துறை காலிப் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கான 2 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் இந்தப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment