FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, August 21, 2014

அரசுப் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு: முறைப்படுத்த வேண்டுகோள்

சென்னை, 20 August 2014
அரசுப் பணிகளில் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் செயலாளர் ஆனந்த் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முதுநிலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள், இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களில் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பின்னர், அதுதொடர்பான அரசாணை டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அவற்றில் முழுவிவரங்கள் இடம்பெறவில்லை. இது பார்வையற்ற பட்டதாரி மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

அரசுத் துறை காலிப் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கான 2 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் இந்தப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment