FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, August 25, 2014

மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போருக்கு வரிச் சலுகை: மத்திய அரசு பரிசீலனை


புது தில்லி, 24 August 2014
மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்கும் நபர்களுக்கு வரி விதிப்பில் சலுகை அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சமூக நலத் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய சமூக நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பது தொடர்பாக மாநில சமூக நலத் துறை அமைச்சர்களின் மாநாடு தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கெலாட், மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பது தொடர்பாக 7 அம்சத் திட்டங்களை முன்வைத்தார். அதில், அரசு அலுவலகங்கள், அரசு இணையதளங்கள் ஆகியவற்றை மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்துவதற்கு மாநில அரசுகள் வசதிகளை செய்து தர வேண்டும்; மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என கெலாட் வலியுறுத்தினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment