FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, August 25, 2014

மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போருக்கு வரிச் சலுகை: மத்திய அரசு பரிசீலனை


புது தில்லி, 24 August 2014
மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்கும் நபர்களுக்கு வரி விதிப்பில் சலுகை அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சமூக நலத் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய சமூக நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பது தொடர்பாக மாநில சமூக நலத் துறை அமைச்சர்களின் மாநாடு தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கெலாட், மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பது தொடர்பாக 7 அம்சத் திட்டங்களை முன்வைத்தார். அதில், அரசு அலுவலகங்கள், அரசு இணையதளங்கள் ஆகியவற்றை மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்துவதற்கு மாநில அரசுகள் வசதிகளை செய்து தர வேண்டும்; மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என கெலாட் வலியுறுத்தினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment