FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, August 25, 2014

மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போருக்கு வரிச் சலுகை: மத்திய அரசு பரிசீலனை


புது தில்லி, 24 August 2014
மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்கும் நபர்களுக்கு வரி விதிப்பில் சலுகை அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சமூக நலத் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய சமூக நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பது தொடர்பாக மாநில சமூக நலத் துறை அமைச்சர்களின் மாநாடு தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கெலாட், மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பது தொடர்பாக 7 அம்சத் திட்டங்களை முன்வைத்தார். அதில், அரசு அலுவலகங்கள், அரசு இணையதளங்கள் ஆகியவற்றை மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்துவதற்கு மாநில அரசுகள் வசதிகளை செய்து தர வேண்டும்; மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என கெலாட் வலியுறுத்தினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment