FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, September 15, 2014

சிறுநீர் கழிக்கப் போன மாற்றுத்திறனாளியை ஆடு திருடன் என்று தாக்கிய 4 பேர்- கைது!

முசிறி: முசிறியில் இரவு நேரத்தில் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை ஆடு திருடன் என்று 4 பேர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரை தாக்கிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் வசிப்பவர் பாலகுமார். இவர் ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாத மாற்றுத்திறனாளி ஆவார். இயற்கை உபாதை: கடந்த மூன்றாம் தேதி இரவு தும்பலத்தில் உள்ள வங்கியின் பின்புறம் வயல்வெளியில் இயற்கை உபாதையை கழிக்க இருட்டான பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அடித்து உதைத்த ஊர்க்காரர்கள்: அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த நடராஜன் , மணி , மனோகரன் மற்றும் சேகர் ஆகியோர் பாலகுமாரை ஆடு திருட வந்ததாக நினைத்து அசிங்கமாக திட்டியும், அடித்து உதைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை: இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பால குமார் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். நான்கு பேர் கைது: இது பற்றி பாலகுமார் முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலகுமாரை தாக்கிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆடு திருடனாக நினைத்து தாக்குதல்: ஊனமுற்ற இளைஞரை ஆடு திருட வந்ததாக நினைத்து தாக்கிய சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment