FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, September 15, 2014

சிறுநீர் கழிக்கப் போன மாற்றுத்திறனாளியை ஆடு திருடன் என்று தாக்கிய 4 பேர்- கைது!

முசிறி: முசிறியில் இரவு நேரத்தில் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை ஆடு திருடன் என்று 4 பேர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரை தாக்கிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் வசிப்பவர் பாலகுமார். இவர் ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாத மாற்றுத்திறனாளி ஆவார். இயற்கை உபாதை: கடந்த மூன்றாம் தேதி இரவு தும்பலத்தில் உள்ள வங்கியின் பின்புறம் வயல்வெளியில் இயற்கை உபாதையை கழிக்க இருட்டான பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அடித்து உதைத்த ஊர்க்காரர்கள்: அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த நடராஜன் , மணி , மனோகரன் மற்றும் சேகர் ஆகியோர் பாலகுமாரை ஆடு திருட வந்ததாக நினைத்து அசிங்கமாக திட்டியும், அடித்து உதைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை: இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பால குமார் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். நான்கு பேர் கைது: இது பற்றி பாலகுமார் முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலகுமாரை தாக்கிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆடு திருடனாக நினைத்து தாக்குதல்: ஊனமுற்ற இளைஞரை ஆடு திருட வந்ததாக நினைத்து தாக்கிய சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment