FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, September 26, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான அகில இந்திய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 8-ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் மாற்றுத்திறன் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் (இடமிருந்து) அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் என்.ஆர்.தனபாலன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், அரிமா மாவட்ட கவர்னர் கே.எஸ்.கண்ணன், தொழிலதிபர் எச்.வசந்தகுமார். (வலது) அணிவகுப்பில் பங்கேற்ற மாற்றுத்திறன் வீரர்கள்.
சென்னை, 25 September 2014,
மாற்றுத் திறனாளிகளுக்கான 8-ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் புதன்கிழமை தொடங்கின.

இந்தப் போட்டிகளை தொழிலதிபர் எச்.வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.

சென்னை நேரு பூங்காவில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் என்.ஆர்.தனபாலன் கூறியது:

சர்வதேச அளவில் விளையாட்டு வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்த, இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

அரிமா மாவட்டம் 324ஏ5, அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் ஆகியவை இணைந்து இந்தப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இதில் தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 50 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளில், இந்தியா முழுவதிலுமிருந்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை நடைபெறும்.

சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர்களும் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

போட்டிகளின் இறுதியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சிவந்தி ஆதித்தனார் நினைவுச் சுழல்கோப்பை வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment