FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, September 26, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான அகில இந்திய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 8-ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் மாற்றுத்திறன் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் (இடமிருந்து) அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் என்.ஆர்.தனபாலன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், அரிமா மாவட்ட கவர்னர் கே.எஸ்.கண்ணன், தொழிலதிபர் எச்.வசந்தகுமார். (வலது) அணிவகுப்பில் பங்கேற்ற மாற்றுத்திறன் வீரர்கள்.
சென்னை, 25 September 2014,
மாற்றுத் திறனாளிகளுக்கான 8-ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் புதன்கிழமை தொடங்கின.

இந்தப் போட்டிகளை தொழிலதிபர் எச்.வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.

சென்னை நேரு பூங்காவில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் என்.ஆர்.தனபாலன் கூறியது:

சர்வதேச அளவில் விளையாட்டு வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்த, இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

அரிமா மாவட்டம் 324ஏ5, அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் ஆகியவை இணைந்து இந்தப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இதில் தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 50 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளில், இந்தியா முழுவதிலுமிருந்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை நடைபெறும்.

சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர்களும் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

போட்டிகளின் இறுதியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சிவந்தி ஆதித்தனார் நினைவுச் சுழல்கோப்பை வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment