FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, September 26, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான அகில இந்திய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 8-ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் மாற்றுத்திறன் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் (இடமிருந்து) அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் என்.ஆர்.தனபாலன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், அரிமா மாவட்ட கவர்னர் கே.எஸ்.கண்ணன், தொழிலதிபர் எச்.வசந்தகுமார். (வலது) அணிவகுப்பில் பங்கேற்ற மாற்றுத்திறன் வீரர்கள்.
சென்னை, 25 September 2014,
மாற்றுத் திறனாளிகளுக்கான 8-ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் புதன்கிழமை தொடங்கின.

இந்தப் போட்டிகளை தொழிலதிபர் எச்.வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.

சென்னை நேரு பூங்காவில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் என்.ஆர்.தனபாலன் கூறியது:

சர்வதேச அளவில் விளையாட்டு வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்த, இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

அரிமா மாவட்டம் 324ஏ5, அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் ஆகியவை இணைந்து இந்தப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இதில் தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 50 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளில், இந்தியா முழுவதிலுமிருந்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை நடைபெறும்.

சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர்களும் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

போட்டிகளின் இறுதியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சிவந்தி ஆதித்தனார் நினைவுச் சுழல்கோப்பை வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment