FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, September 15, 2014

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலைத் தேர்வுக்கு பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசு அளிக்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெறுவது அவசியமாகும். நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளில் தேர்ச்சிப் பெற மூன்று வகையான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அவை முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

தமிழகத்தில் குடிமைப் பணிகளுக்கான தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, குடிமைப் பணித் தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. விடுதியில் தங்கி முழுநேரமும் பயிற்சி பெறுவோருக்கென 225 இடங்களும், மாலை நேரம் மட்டும் பயிற்சி பெறுவோருக்காக 100 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆகவும், அதிகபட்ச வயது 32 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் உச்ச வயது வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

நுழைவுத் தேர்வு: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்போரைத் தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் 14-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பயிற்சி நிலையத்தின் தலைவர் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது ஜாதி, வயது, பட்டப் படிப்பு சான்றுகளின் நகல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான உரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அந்த அலுவலகத்திலேயே ஒப்படைக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

சென்னை, கடலூர், கோவை, தருமபுரி, சேலம், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

பாடத் திட்ட விவரம்: கொள்குறி வகைகளில் கேள்விகள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய - உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு-நிர்வாக முறை உள்ளிட்ட பல்வேறுப் பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். நுழைவுத் தேர்வுக்கான சீட்டுகள் பயிற்சி மையத்தின் இணையதளத்தில் (www.civilservicecoaching.com) பதிவேற்றம் செய்யப்படும். மேலும், விவரங்களைப் பெற 044-2462 1475 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment