FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, September 4, 2014

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

சென்னை, 04.09.2014
மெடிந்தியா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், ஊட்டச்சத்துகள் குறித்த கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மருத்துவ முகாமை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்துப் பேசியது:

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறுத் திட்டங்களைக் கொண்டுவந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக இதுவரை ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொண்டு நிறுவனங்களும்,மெடிந்தியா போன்ற அறக்கட்டளைகளும் அரசுக்கு ஒரு பாலமாக விளங்குகின்றன.

மாற்றுத்திறனாளிகள் கடந்த காலம் முதல் தற்போது வரை கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு, சுயதொழில் என பல்வேறு துறைகளிலும் வியத்தகு முன்னேற்றம் கண்டு வருகின்றனர். உடலில் உள்ள குறையை பொருட்படுத்தாமல் மனதில் உறுதிகொண்டு போராடினால் உங்கள் இலக்கை நிச்சயம் அடைய முடியும் என்றார். அதையடுத்து மெடிந்தியா மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் பேசியது: இந்த அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர், மலைவாழ் மக்கள், மாற்றுத்திறனுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு இதுவரை 78 இலவச மருத்துவ முகாம்கள், 28 பொதுசுகாதாரம் குறித்த கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மாணவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தசோகை, கொழுப்பு, புரதச் சத்து குறைபாடுகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர். மாற்றுத்திறனுடைய குழந்தைகள் நலனுக்காக அரசின் ஒத்துழைப்போடு மேலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம் என்றார் அவர்.

அதையடுத்து ஊட்டச் சத்துகளின் அவசியம், பொது சுகாதாரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பிரெய்லி அட்டைகளை பார்வைக்குறைபாடுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளர் பி.சிவசங்கரன், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் கே.மணிவாசன், செயிண்ட் லூயி காது கேளாதோர், பார்வையற்றோர் பள்ளி, டாக்டர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி, சிறிய மலர் காதுகேளாதோர் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment