FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, September 4, 2014

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

சென்னை, 04.09.2014
மெடிந்தியா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், ஊட்டச்சத்துகள் குறித்த கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மருத்துவ முகாமை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்துப் பேசியது:

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறுத் திட்டங்களைக் கொண்டுவந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக இதுவரை ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொண்டு நிறுவனங்களும்,மெடிந்தியா போன்ற அறக்கட்டளைகளும் அரசுக்கு ஒரு பாலமாக விளங்குகின்றன.

மாற்றுத்திறனாளிகள் கடந்த காலம் முதல் தற்போது வரை கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு, சுயதொழில் என பல்வேறு துறைகளிலும் வியத்தகு முன்னேற்றம் கண்டு வருகின்றனர். உடலில் உள்ள குறையை பொருட்படுத்தாமல் மனதில் உறுதிகொண்டு போராடினால் உங்கள் இலக்கை நிச்சயம் அடைய முடியும் என்றார். அதையடுத்து மெடிந்தியா மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் பேசியது: இந்த அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர், மலைவாழ் மக்கள், மாற்றுத்திறனுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு இதுவரை 78 இலவச மருத்துவ முகாம்கள், 28 பொதுசுகாதாரம் குறித்த கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மாணவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தசோகை, கொழுப்பு, புரதச் சத்து குறைபாடுகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர். மாற்றுத்திறனுடைய குழந்தைகள் நலனுக்காக அரசின் ஒத்துழைப்போடு மேலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம் என்றார் அவர்.

அதையடுத்து ஊட்டச் சத்துகளின் அவசியம், பொது சுகாதாரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பிரெய்லி அட்டைகளை பார்வைக்குறைபாடுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளர் பி.சிவசங்கரன், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் கே.மணிவாசன், செயிண்ட் லூயி காது கேளாதோர், பார்வையற்றோர் பள்ளி, டாக்டர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி, சிறிய மலர் காதுகேளாதோர் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment