FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, September 4, 2014

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

சென்னை, 04.09.2014
மெடிந்தியா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், ஊட்டச்சத்துகள் குறித்த கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மருத்துவ முகாமை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்துப் பேசியது:

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறுத் திட்டங்களைக் கொண்டுவந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக இதுவரை ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொண்டு நிறுவனங்களும்,மெடிந்தியா போன்ற அறக்கட்டளைகளும் அரசுக்கு ஒரு பாலமாக விளங்குகின்றன.

மாற்றுத்திறனாளிகள் கடந்த காலம் முதல் தற்போது வரை கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு, சுயதொழில் என பல்வேறு துறைகளிலும் வியத்தகு முன்னேற்றம் கண்டு வருகின்றனர். உடலில் உள்ள குறையை பொருட்படுத்தாமல் மனதில் உறுதிகொண்டு போராடினால் உங்கள் இலக்கை நிச்சயம் அடைய முடியும் என்றார். அதையடுத்து மெடிந்தியா மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் பேசியது: இந்த அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர், மலைவாழ் மக்கள், மாற்றுத்திறனுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு இதுவரை 78 இலவச மருத்துவ முகாம்கள், 28 பொதுசுகாதாரம் குறித்த கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மாணவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தசோகை, கொழுப்பு, புரதச் சத்து குறைபாடுகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர். மாற்றுத்திறனுடைய குழந்தைகள் நலனுக்காக அரசின் ஒத்துழைப்போடு மேலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம் என்றார் அவர்.

அதையடுத்து ஊட்டச் சத்துகளின் அவசியம், பொது சுகாதாரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பிரெய்லி அட்டைகளை பார்வைக்குறைபாடுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளர் பி.சிவசங்கரன், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் கே.மணிவாசன், செயிண்ட் லூயி காது கேளாதோர், பார்வையற்றோர் பள்ளி, டாக்டர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி, சிறிய மலர் காதுகேளாதோர் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment