FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, September 24, 2014

வாய்பேச முடியாதவர், மிகவும் ஏழை மாற்றுதிறனாளி பெண் வன்புணர்வு - நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்!

22.09.2014, தஞ்சாவூர்:
தஞ்சையில் மாற்றுத் திறனாளி பெண்ணை வன்புணர்வு செய்த நான்குபேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்ப்பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை கீழவாசல் சின்னையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அப்துல்அஜீத். இவரது மகள் பானு (32). மாற்றுத்திறனாளி (வாய்பேச முடியாதவர், மிகவும் ஏழை)இவரை நேற்றுமுன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று ஒரத்தநாடு பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பானுவின் உடல்நிலை மிகவும் மோச மாகி விட்டது. எனவே சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சேர்ந்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தஞ்சை கீழவாசல் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறவினர்களிடம் உறுதி கூறியதைத் தொ டர்ந்து மறியல் போராட்டத்தை கை விட்டனர். மேலும் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கால்வதுறையிடம் பானுவின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment