FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, September 2, 2014

காது கேட்காது, வாய் பேச முடியாது எஸ்.எம்.எஸ்.சில் காதல் வளர்த்து கரம்பிடித்த மாற்றுத்திறன் ஜோடி: பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் தஞ்சம்

01.09.2014, சேலம்:
 சேலத்தில் வாய் பேச முடியாமலும், செவித்திறன் இல்லாமலும் எஸ்.எம்.எஸ் மூலம் காதல் வளர்த்த அபூர்வ ஜோடி, பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் நடந்தது. தர்மபுரி மாவட்டம் பெரியான்பட்டியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் சென்னையன் (24). திருவண்ணாமலை மாவட்டம் பேளூர் குசால்பேட்டை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் மகள் பாரதி (24). பிறப்பால் இவர்கள் இருவரும் காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த ‘சைகையை‘ மட்டுமே நம்பியிருந்த இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் மாவட் டம் வாணியம்பாடியில் உள்ள சிறப்புப் பள்ளியில் மேல்நிலை பள்ளிப் படிப்புக்காக சேர்ந்தனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. இதனை, செல்போனில் எஸ்.எம்.எஸ். வளர்த்து வந்துள்ளனர்.

இதில் பாரதி, பி.காம். படித்துவிட்டு சென்னையில் பணியாற்றுகிறார். அவரது தங்கைக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. தனக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யாமல் தங்கைக்கு திருமணம் நடத்தப்பட்டது குறித்து சென்னையனுக்கு பாரதி எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளனர். அவரது கவலையை உணர்ந்து பதில் எஸ்எம்எஸ்சை அனுப்பிய சென்னையன், நாம் மணம் முடிப்பதற்கான தருணம் இது என்பதையும் தெரிவித்துள்ளார். நண்பர்களின் துணையு டன் கடந்த வாரத்தில் காதலியின் கரம் பிடித்தார் சென்னையன். சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் நண்பர்கள் வாழ்த்த இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இருவர் வீட்டிலும் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. நண்பர்கள் வீட்டில் தங்கிய இருவரும் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

No comments:

Post a Comment