FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, September 2, 2014

காது கேட்காது, வாய் பேச முடியாது எஸ்.எம்.எஸ்.சில் காதல் வளர்த்து கரம்பிடித்த மாற்றுத்திறன் ஜோடி: பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் தஞ்சம்

01.09.2014, சேலம்:
 சேலத்தில் வாய் பேச முடியாமலும், செவித்திறன் இல்லாமலும் எஸ்.எம்.எஸ் மூலம் காதல் வளர்த்த அபூர்வ ஜோடி, பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் நடந்தது. தர்மபுரி மாவட்டம் பெரியான்பட்டியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் சென்னையன் (24). திருவண்ணாமலை மாவட்டம் பேளூர் குசால்பேட்டை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் மகள் பாரதி (24). பிறப்பால் இவர்கள் இருவரும் காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த ‘சைகையை‘ மட்டுமே நம்பியிருந்த இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் மாவட் டம் வாணியம்பாடியில் உள்ள சிறப்புப் பள்ளியில் மேல்நிலை பள்ளிப் படிப்புக்காக சேர்ந்தனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. இதனை, செல்போனில் எஸ்.எம்.எஸ். வளர்த்து வந்துள்ளனர்.

இதில் பாரதி, பி.காம். படித்துவிட்டு சென்னையில் பணியாற்றுகிறார். அவரது தங்கைக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. தனக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யாமல் தங்கைக்கு திருமணம் நடத்தப்பட்டது குறித்து சென்னையனுக்கு பாரதி எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளனர். அவரது கவலையை உணர்ந்து பதில் எஸ்எம்எஸ்சை அனுப்பிய சென்னையன், நாம் மணம் முடிப்பதற்கான தருணம் இது என்பதையும் தெரிவித்துள்ளார். நண்பர்களின் துணையு டன் கடந்த வாரத்தில் காதலியின் கரம் பிடித்தார் சென்னையன். சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் நண்பர்கள் வாழ்த்த இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இருவர் வீட்டிலும் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. நண்பர்கள் வீட்டில் தங்கிய இருவரும் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

No comments:

Post a Comment