FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, September 2, 2014

காது கேட்காது, வாய் பேச முடியாது எஸ்.எம்.எஸ்.சில் காதல் வளர்த்து கரம்பிடித்த மாற்றுத்திறன் ஜோடி: பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் தஞ்சம்

01.09.2014, சேலம்:
 சேலத்தில் வாய் பேச முடியாமலும், செவித்திறன் இல்லாமலும் எஸ்.எம்.எஸ் மூலம் காதல் வளர்த்த அபூர்வ ஜோடி, பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் நடந்தது. தர்மபுரி மாவட்டம் பெரியான்பட்டியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் சென்னையன் (24). திருவண்ணாமலை மாவட்டம் பேளூர் குசால்பேட்டை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் மகள் பாரதி (24). பிறப்பால் இவர்கள் இருவரும் காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த ‘சைகையை‘ மட்டுமே நம்பியிருந்த இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் மாவட் டம் வாணியம்பாடியில் உள்ள சிறப்புப் பள்ளியில் மேல்நிலை பள்ளிப் படிப்புக்காக சேர்ந்தனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. இதனை, செல்போனில் எஸ்.எம்.எஸ். வளர்த்து வந்துள்ளனர்.

இதில் பாரதி, பி.காம். படித்துவிட்டு சென்னையில் பணியாற்றுகிறார். அவரது தங்கைக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. தனக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யாமல் தங்கைக்கு திருமணம் நடத்தப்பட்டது குறித்து சென்னையனுக்கு பாரதி எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளனர். அவரது கவலையை உணர்ந்து பதில் எஸ்எம்எஸ்சை அனுப்பிய சென்னையன், நாம் மணம் முடிப்பதற்கான தருணம் இது என்பதையும் தெரிவித்துள்ளார். நண்பர்களின் துணையு டன் கடந்த வாரத்தில் காதலியின் கரம் பிடித்தார் சென்னையன். சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் நண்பர்கள் வாழ்த்த இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இருவர் வீட்டிலும் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. நண்பர்கள் வீட்டில் தங்கிய இருவரும் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

No comments:

Post a Comment