FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, September 2, 2014

காது கேட்காது, வாய் பேச முடியாது எஸ்.எம்.எஸ்.சில் காதல் வளர்த்து கரம்பிடித்த மாற்றுத்திறன் ஜோடி: பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் தஞ்சம்

01.09.2014, சேலம்:
 சேலத்தில் வாய் பேச முடியாமலும், செவித்திறன் இல்லாமலும் எஸ்.எம்.எஸ் மூலம் காதல் வளர்த்த அபூர்வ ஜோடி, பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் நடந்தது. தர்மபுரி மாவட்டம் பெரியான்பட்டியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் சென்னையன் (24). திருவண்ணாமலை மாவட்டம் பேளூர் குசால்பேட்டை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் மகள் பாரதி (24). பிறப்பால் இவர்கள் இருவரும் காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த ‘சைகையை‘ மட்டுமே நம்பியிருந்த இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் மாவட் டம் வாணியம்பாடியில் உள்ள சிறப்புப் பள்ளியில் மேல்நிலை பள்ளிப் படிப்புக்காக சேர்ந்தனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. இதனை, செல்போனில் எஸ்.எம்.எஸ். வளர்த்து வந்துள்ளனர்.

இதில் பாரதி, பி.காம். படித்துவிட்டு சென்னையில் பணியாற்றுகிறார். அவரது தங்கைக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. தனக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யாமல் தங்கைக்கு திருமணம் நடத்தப்பட்டது குறித்து சென்னையனுக்கு பாரதி எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளனர். அவரது கவலையை உணர்ந்து பதில் எஸ்எம்எஸ்சை அனுப்பிய சென்னையன், நாம் மணம் முடிப்பதற்கான தருணம் இது என்பதையும் தெரிவித்துள்ளார். நண்பர்களின் துணையு டன் கடந்த வாரத்தில் காதலியின் கரம் பிடித்தார் சென்னையன். சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் நண்பர்கள் வாழ்த்த இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இருவர் வீட்டிலும் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. நண்பர்கள் வீட்டில் தங்கிய இருவரும் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

No comments:

Post a Comment