FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, September 4, 2014

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

01.09.2014, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேலூர் ராயல் அக்ரோ டெய்ரி நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எம்.நிர்மலா வரவேற்றார்.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் தீபக் கலந்து கொண்டு சுயம்வர நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இவர்களில் இருந்து 18 ஜோடியினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தனர்.

இவர்களுக்கு 48 வகையான சீர்வரிசைப் பொருள்கள், ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், 4 கிராம் தங்கம் ஆகியவற்றை அமைப்பின் சார்பில் வழங்கி அக்டோபர் மாதத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment