FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, September 4, 2014

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

01.09.2014, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேலூர் ராயல் அக்ரோ டெய்ரி நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எம்.நிர்மலா வரவேற்றார்.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் தீபக் கலந்து கொண்டு சுயம்வர நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இவர்களில் இருந்து 18 ஜோடியினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தனர்.

இவர்களுக்கு 48 வகையான சீர்வரிசைப் பொருள்கள், ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், 4 கிராம் தங்கம் ஆகியவற்றை அமைப்பின் சார்பில் வழங்கி அக்டோபர் மாதத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment