FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, September 4, 2014

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

01.09.2014, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேலூர் ராயல் அக்ரோ டெய்ரி நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எம்.நிர்மலா வரவேற்றார்.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் தீபக் கலந்து கொண்டு சுயம்வர நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இவர்களில் இருந்து 18 ஜோடியினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தனர்.

இவர்களுக்கு 48 வகையான சீர்வரிசைப் பொருள்கள், ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், 4 கிராம் தங்கம் ஆகியவற்றை அமைப்பின் சார்பில் வழங்கி அக்டோபர் மாதத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment