FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, September 4, 2014

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

01.09.2014, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேலூர் ராயல் அக்ரோ டெய்ரி நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எம்.நிர்மலா வரவேற்றார்.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் தீபக் கலந்து கொண்டு சுயம்வர நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இவர்களில் இருந்து 18 ஜோடியினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தனர்.

இவர்களுக்கு 48 வகையான சீர்வரிசைப் பொருள்கள், ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், 4 கிராம் தங்கம் ஆகியவற்றை அமைப்பின் சார்பில் வழங்கி அக்டோபர் மாதத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment