FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, September 29, 2014

புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஊர்வலம்

புதுச்சேரி, 29 September 2014
புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோரிக்கை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பின்படி, உலக காதுகேளாதோருக்கான வாரம் செப்டம்பர் 26 முதல் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சுமார் 200 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அனைத்து அரசுத் துறைகளில் செய்கை மொழி பெயர்ப்பாளர் பணியிடம் உருவாக்கவும், காது கேளாதோருக்கான ஒரு சதவீத இடஒதுக்கீட்டை அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் உறுதி செய்திடவும், இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு மறுக்கப்பட்டு வரும் ஓட்டுநர் உரிமம் கிடைத்திடவும், காது கேளாதோருக்கான தனி வேலை வாய்ப்பு முகாமை அரசு நடத்த வேண்டும்.

புதுச்சேரியில் சிறப்பு ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஊர்வலத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

சங்கத் தலைவர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் பி.ஜி.பாலமுருகன் வரவேற்றார். சமூக நலத்துறை இயக்குநர் கே.உத்தமன் பேரணியைத் தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் வெ.பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.

கார்கில் நினைவுச் சின்னத்தில் தொடங்கிய பேரணி, டூப்ளே சிலை அருகே முடிவடைந்தது.

No comments:

Post a Comment