FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, September 29, 2014

புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஊர்வலம்

புதுச்சேரி, 29 September 2014
புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோரிக்கை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பின்படி, உலக காதுகேளாதோருக்கான வாரம் செப்டம்பர் 26 முதல் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சுமார் 200 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அனைத்து அரசுத் துறைகளில் செய்கை மொழி பெயர்ப்பாளர் பணியிடம் உருவாக்கவும், காது கேளாதோருக்கான ஒரு சதவீத இடஒதுக்கீட்டை அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் உறுதி செய்திடவும், இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு மறுக்கப்பட்டு வரும் ஓட்டுநர் உரிமம் கிடைத்திடவும், காது கேளாதோருக்கான தனி வேலை வாய்ப்பு முகாமை அரசு நடத்த வேண்டும்.

புதுச்சேரியில் சிறப்பு ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஊர்வலத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

சங்கத் தலைவர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் பி.ஜி.பாலமுருகன் வரவேற்றார். சமூக நலத்துறை இயக்குநர் கே.உத்தமன் பேரணியைத் தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் வெ.பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.

கார்கில் நினைவுச் சின்னத்தில் தொடங்கிய பேரணி, டூப்ளே சிலை அருகே முடிவடைந்தது.

No comments:

Post a Comment