FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, September 29, 2014

புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஊர்வலம்

புதுச்சேரி, 29 September 2014
புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோரிக்கை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பின்படி, உலக காதுகேளாதோருக்கான வாரம் செப்டம்பர் 26 முதல் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சுமார் 200 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அனைத்து அரசுத் துறைகளில் செய்கை மொழி பெயர்ப்பாளர் பணியிடம் உருவாக்கவும், காது கேளாதோருக்கான ஒரு சதவீத இடஒதுக்கீட்டை அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் உறுதி செய்திடவும், இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு மறுக்கப்பட்டு வரும் ஓட்டுநர் உரிமம் கிடைத்திடவும், காது கேளாதோருக்கான தனி வேலை வாய்ப்பு முகாமை அரசு நடத்த வேண்டும்.

புதுச்சேரியில் சிறப்பு ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஊர்வலத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

சங்கத் தலைவர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் பி.ஜி.பாலமுருகன் வரவேற்றார். சமூக நலத்துறை இயக்குநர் கே.உத்தமன் பேரணியைத் தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் வெ.பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.

கார்கில் நினைவுச் சின்னத்தில் தொடங்கிய பேரணி, டூப்ளே சிலை அருகே முடிவடைந்தது.

No comments:

Post a Comment