FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, September 29, 2014

புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஊர்வலம்

புதுச்சேரி, 29 September 2014
புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோரிக்கை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பின்படி, உலக காதுகேளாதோருக்கான வாரம் செப்டம்பர் 26 முதல் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சுமார் 200 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அனைத்து அரசுத் துறைகளில் செய்கை மொழி பெயர்ப்பாளர் பணியிடம் உருவாக்கவும், காது கேளாதோருக்கான ஒரு சதவீத இடஒதுக்கீட்டை அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் உறுதி செய்திடவும், இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு மறுக்கப்பட்டு வரும் ஓட்டுநர் உரிமம் கிடைத்திடவும், காது கேளாதோருக்கான தனி வேலை வாய்ப்பு முகாமை அரசு நடத்த வேண்டும்.

புதுச்சேரியில் சிறப்பு ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஊர்வலத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

சங்கத் தலைவர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் பி.ஜி.பாலமுருகன் வரவேற்றார். சமூக நலத்துறை இயக்குநர் கே.உத்தமன் பேரணியைத் தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் வெ.பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.

கார்கில் நினைவுச் சின்னத்தில் தொடங்கிய பேரணி, டூப்ளே சிலை அருகே முடிவடைந்தது.

No comments:

Post a Comment