FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, September 12, 2014

மாற்றுத்திறனாளிகள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தல்

திருப்பதி, 12 September 2014
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.

திருமலை ஏழுமலையானுக்கு இந்த மாதம் 26-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோத்ஸவம் தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தான அனைத்துத் துறை அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.

அந்த ஏற்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ வியாழக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியது:

ஏழுமலையான் கோயில் அக்னி மூலையில் இருந்த, ஸஹஸ்ர தீபாலங்கார
மண்டபம் இடப்பற்றாக்குறையால் அகற்றப்பட்டு, 100 மீட்டர் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழுமலையான் கோயில் முன் ஏற்பாடு செய்யப்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான காத்திருப்பு வரிசை, தெற்கு மாடவீதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் வரிசை, பல மணி நேரம் நின்று ஏழுமலையானை தரிசிக்க முடியாதவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த வரிசையில் சிறு சிறு அங்கக் குறைபாடு உள்ளவர்களும் தரிசனத்துக்கு வருகின்றனர்.

அதனால், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்களின் தரிசன வரிசை ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அதன்படி நடந்து, தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment