FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, September 12, 2014

மாற்றுத்திறனாளிகள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தல்

திருப்பதி, 12 September 2014
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.

திருமலை ஏழுமலையானுக்கு இந்த மாதம் 26-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோத்ஸவம் தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தான அனைத்துத் துறை அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.

அந்த ஏற்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ வியாழக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியது:

ஏழுமலையான் கோயில் அக்னி மூலையில் இருந்த, ஸஹஸ்ர தீபாலங்கார
மண்டபம் இடப்பற்றாக்குறையால் அகற்றப்பட்டு, 100 மீட்டர் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழுமலையான் கோயில் முன் ஏற்பாடு செய்யப்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான காத்திருப்பு வரிசை, தெற்கு மாடவீதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் வரிசை, பல மணி நேரம் நின்று ஏழுமலையானை தரிசிக்க முடியாதவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த வரிசையில் சிறு சிறு அங்கக் குறைபாடு உள்ளவர்களும் தரிசனத்துக்கு வருகின்றனர்.

அதனால், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்களின் தரிசன வரிசை ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அதன்படி நடந்து, தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment