FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, September 12, 2014

மாற்றுத்திறனாளிகள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தல்

திருப்பதி, 12 September 2014
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.

திருமலை ஏழுமலையானுக்கு இந்த மாதம் 26-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோத்ஸவம் தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தான அனைத்துத் துறை அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.

அந்த ஏற்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ வியாழக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியது:

ஏழுமலையான் கோயில் அக்னி மூலையில் இருந்த, ஸஹஸ்ர தீபாலங்கார
மண்டபம் இடப்பற்றாக்குறையால் அகற்றப்பட்டு, 100 மீட்டர் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழுமலையான் கோயில் முன் ஏற்பாடு செய்யப்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான காத்திருப்பு வரிசை, தெற்கு மாடவீதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் வரிசை, பல மணி நேரம் நின்று ஏழுமலையானை தரிசிக்க முடியாதவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த வரிசையில் சிறு சிறு அங்கக் குறைபாடு உள்ளவர்களும் தரிசனத்துக்கு வருகின்றனர்.

அதனால், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்களின் தரிசன வரிசை ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அதன்படி நடந்து, தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment