FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, September 12, 2014

மாற்றுத்திறனாளிகள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தல்

திருப்பதி, 12 September 2014
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.

திருமலை ஏழுமலையானுக்கு இந்த மாதம் 26-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோத்ஸவம் தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தான அனைத்துத் துறை அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.

அந்த ஏற்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ வியாழக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியது:

ஏழுமலையான் கோயில் அக்னி மூலையில் இருந்த, ஸஹஸ்ர தீபாலங்கார
மண்டபம் இடப்பற்றாக்குறையால் அகற்றப்பட்டு, 100 மீட்டர் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழுமலையான் கோயில் முன் ஏற்பாடு செய்யப்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான காத்திருப்பு வரிசை, தெற்கு மாடவீதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் வரிசை, பல மணி நேரம் நின்று ஏழுமலையானை தரிசிக்க முடியாதவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த வரிசையில் சிறு சிறு அங்கக் குறைபாடு உள்ளவர்களும் தரிசனத்துக்கு வருகின்றனர்.

அதனால், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்களின் தரிசன வரிசை ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அதன்படி நடந்து, தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment