FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, April 6, 2015

"இந்தியக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 0.56% மட்டுமே'

05.04.2015, புது தில்லி
நாட்டில் உள்ள 150 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் 15.21 லட்சம் மாணவர்களில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 8,449 பேர் அதாவது 0.56 சதவீதம் பேர் மட்டுமே என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குநர் ஜாவேத் அபிதி தெரிவித்ததாவது:

மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு பற்றிய விவரம் கேட்டு, 200 கல்வி நிலையங்களுக்கு கடிதம் எழுதப்பட்டது. அவற்றில் 16 ஐஐடிகள், 13 ஐஐஎம்கள் உள்பட 150 கல்வி நிலையங்கள் மட்டுமே பதிலளித்தன.

அந்தக் கல்வி நிலையங்களில் படிக்கும் 15,21,438 மாணவர்களில், வெறும் 8,449 பேர் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் என்று தெரிய வந்தது.

இது மொத்தம் உள்ள மாணவர்களில் 0.56 சதவீதம் மட்டுமே ஆகும்.

மாற்றுத் திறனாளி மாணவர்களில், எலும்பு முறிவுக் குறைபாடுள்ளவர்கள் 46.67 சதவீதமும், கண் பார்வை பாதிப்படைந்தவர்கள் 32.13 சதவீதமும், பேச்சு / செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 5.16 சதவீதமும், பிற குறைபாடுள்ளவர்கள் 16.05 சதவீதமும் அடங்குவர்.

1995ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டு, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில், வெறும் 0.5 சதவீதம் மட்டுமே உண்மையில் அமலாகிறது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

கல்லூரிகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஏன் செல்வதில்லை? கல்வி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளும், அடிப்படை வசதிகள் இல்லாததே இதற்கு காரணம்.

இந்த ஆய்வை அரசு கவனத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று ஜாவேத் அபிதி தெரிவித்தார்.

கடந்த ஆண்டில், மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 0.63 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment