FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, April 6, 2015

"இந்தியக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 0.56% மட்டுமே'

05.04.2015, புது தில்லி
நாட்டில் உள்ள 150 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் 15.21 லட்சம் மாணவர்களில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 8,449 பேர் அதாவது 0.56 சதவீதம் பேர் மட்டுமே என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குநர் ஜாவேத் அபிதி தெரிவித்ததாவது:

மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு பற்றிய விவரம் கேட்டு, 200 கல்வி நிலையங்களுக்கு கடிதம் எழுதப்பட்டது. அவற்றில் 16 ஐஐடிகள், 13 ஐஐஎம்கள் உள்பட 150 கல்வி நிலையங்கள் மட்டுமே பதிலளித்தன.

அந்தக் கல்வி நிலையங்களில் படிக்கும் 15,21,438 மாணவர்களில், வெறும் 8,449 பேர் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் என்று தெரிய வந்தது.

இது மொத்தம் உள்ள மாணவர்களில் 0.56 சதவீதம் மட்டுமே ஆகும்.

மாற்றுத் திறனாளி மாணவர்களில், எலும்பு முறிவுக் குறைபாடுள்ளவர்கள் 46.67 சதவீதமும், கண் பார்வை பாதிப்படைந்தவர்கள் 32.13 சதவீதமும், பேச்சு / செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 5.16 சதவீதமும், பிற குறைபாடுள்ளவர்கள் 16.05 சதவீதமும் அடங்குவர்.

1995ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டு, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில், வெறும் 0.5 சதவீதம் மட்டுமே உண்மையில் அமலாகிறது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

கல்லூரிகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஏன் செல்வதில்லை? கல்வி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளும், அடிப்படை வசதிகள் இல்லாததே இதற்கு காரணம்.

இந்த ஆய்வை அரசு கவனத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று ஜாவேத் அபிதி தெரிவித்தார்.

கடந்த ஆண்டில், மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 0.63 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment