FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, April 23, 2015

வேலை வாய்ப்பு உதவித்தொகை மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

22.04.2015, கடலூர்: 
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காலாண்டிற்கான உதவித் தொகைக்கான விண்ணப்படும் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கும் மேலாக வேலைக்காக காத்திருக்கும் உடல் ஊனமுற்றஎஸ்.எஸ். எல்.சி., முடித்தவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், பிளஸ் 2விற்கு 375 ரூபாயும், பட்டப்படிப்பிற்கு 450 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற்றிட மனுதாரர் உடல் ஊனமுற்றவராகவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கு மேலாக பதிவு புதுப்பித்து வருபவராகவும், தொடர்ந்து படிப்பவராகவோ அல்லது வேலையில் இருக்கக்கூடாது. தகுதியுடையவர்கள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.தகுதியின் அடிப்படையில் 10 ஆண்டுகள் உதவித் தொகை வழங்கப்படும்.ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. சுய உறுதிமொழி ஆவணம் மட்டும் சமர்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment