FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, April 26, 2015

மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் சிபிஎம் எம்எல்ஏ!

25.04.2015, திருவனந்தபுரம்: 
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. இளமரம் கரீம் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம், காசர்கோடு நகரில் நேற்று நடந்த அரசு சாலை போக்குவரத்து கழக நிகழ்ச்சியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. இளமரம் கரீகம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்கியதால்தான் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (கே.எஸ்.ஆர்.டி.சி.) இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில், கே.எஸ்.ஆர்.டி.சி.யின் இழப்புகள் குறித்து பேசும்போது, மாற்றுத்திறனாளிகள் உணர்வுகளை பாதிக்கும் வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கூறியவற்றில் உள்நோக்கம் எதுவும் இல்லை. எனினும், அது நடந்திருக்க கூடாது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment