FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, April 26, 2015

மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் சிபிஎம் எம்எல்ஏ!

25.04.2015, திருவனந்தபுரம்: 
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. இளமரம் கரீம் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம், காசர்கோடு நகரில் நேற்று நடந்த அரசு சாலை போக்குவரத்து கழக நிகழ்ச்சியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. இளமரம் கரீகம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்கியதால்தான் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (கே.எஸ்.ஆர்.டி.சி.) இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில், கே.எஸ்.ஆர்.டி.சி.யின் இழப்புகள் குறித்து பேசும்போது, மாற்றுத்திறனாளிகள் உணர்வுகளை பாதிக்கும் வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கூறியவற்றில் உள்நோக்கம் எதுவும் இல்லை. எனினும், அது நடந்திருக்க கூடாது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment