FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, April 26, 2015

மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் சிபிஎம் எம்எல்ஏ!

25.04.2015, திருவனந்தபுரம்: 
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. இளமரம் கரீம் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம், காசர்கோடு நகரில் நேற்று நடந்த அரசு சாலை போக்குவரத்து கழக நிகழ்ச்சியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. இளமரம் கரீகம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்கியதால்தான் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (கே.எஸ்.ஆர்.டி.சி.) இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில், கே.எஸ்.ஆர்.டி.சி.யின் இழப்புகள் குறித்து பேசும்போது, மாற்றுத்திறனாளிகள் உணர்வுகளை பாதிக்கும் வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கூறியவற்றில் உள்நோக்கம் எதுவும் இல்லை. எனினும், அது நடந்திருக்க கூடாது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment