FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, April 23, 2015

இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரம் ரத்து

23.04.2015, புது டெல்லி
இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம்.

நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல், உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா (மாற்றுத்திறனாளிகள்) தடகள சாம்பியன்ஷிப் போட்டியின்போது வீரர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்காதது ஆகியவற்றின் எதிரொலியாக இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியை காலவரையறையின்றி கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்தது சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி.

அதைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய விளையாட்டு அமைச்சகம், உங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக்கேட்டு இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை நேற்று தற்காலி கமாக ரத்து செய்து உத்தர விட்டுள்ளது மத்திய விளை யாட்டு அமைச்சகம். பாரா ஒலிம்பிக் கமிட்டியானது, வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவில்லை. அதனால் வீரர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

அங்கீகாரம் தொடர்பான விதி முறைகளையும், தனது சொந்த விதிமுறைகளையும் பாரா ஒலிம்பிக் கமிட்டி மீறியுள்ளதால் அதன் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment