FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, April 11, 2015

நெல்லை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

10.04.2015
வேலைவாய்ப்பு அலுவலர் அபுபக்கர்சித்திக் வெளியிட்டுள்ள செய்தி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர் உள்பட அனைத்து இன பதிவுதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.

9ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதும் பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. தகுதி உடைய மனுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து உதவித்தொகைக்கான விண்ணப்பத்தைப் பெற்று மே 31ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோர், தொடர்ந்து அதனைப் பெற சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள்:

மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நீக்கப்பட்டதால் வருவாய்த் துறை சான்று தேவையில்லை. ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கிக் கணக்குப் புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த்துறை சான்று ஆகியவற்றுடன் மே 31ம்தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்கலாம். உதவித்தொகை பெறுவதன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு எண் எந்த விதத்திலும் பாதிக்காது. ரத்து செய்யப்பட மாட்டாது. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க அவசியமில்லை.

No comments:

Post a Comment