FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, April 20, 2015

திருமலையில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் வரிசையில் வருகிறது மாற்றம்

18.04.2015, திருப்பதி:
திருமலையில், மூத்த குடிமக்கள் வரிசையில், தேவஸ்தானம், மாற்றம் கொண்டு வர உள்ளது.திருமலையில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், காலை, 10:00 மணி, மதியம், 3:00 மணிக்கு, தனி வரிசை மூலம், கோவில் முன் வாசல் வழியாக, ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, அவர்களின் காத்திருப்பு வரிசை, கோவில் வடக்கு மாட வீதியில் உள்ளது. அதனால், அவர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு, வெகுதூரம் நடந்து செல்கின்றனர்.இதை தவிர்க்க, தேவஸ்தானம், அவர்களை, சஹஸ்ர தீபாலங்கார மண்டபம் எதிரில் உள்ள, அவசர வாசல் வழியாக, கோவிலுக்குள் அனுப்ப, முடிவு செய்துள்ளது. மேலும், அவர்களின் தரிசன நேரங்களில், தற்காலிக தரிசன வரிசை ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், கோவிலுக்குள் அனுப்ப, தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment