FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, April 24, 2015

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: ஏப்ரல் 24 முதல் விண்ணப்பிக்கலாம்

22.04.2015, காஞ்சிபுரம் பள்ளிகளில் உள்ள 204 ஆய்வக உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேர விரும்புவோர் வருகிற 24 முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறியது: பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர்

பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில், வருகிற 24 முதல் மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 204 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். 18 வயதுக்கு உள்பட்டவராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) ஆகியோர் அதிகபட்சம் 32 வயதாக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு சலுகைகள் நடைமுறையிலுள்ள அரசு ஆணைகள், விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்),

பழங்குடியின வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஆண் விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே சின்னகொலம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியிலும், பெண் விண்ணப்பதாரர்கள் தாம்பரம் சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ. 100, சேவைக் கட்டணம் ரூ. 50 குறிப்பிட்ட சேவை மையங்களில் ரொக்கமாக செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினர் கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment