FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, April 12, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு இணையதளத்தில் சலுகை டிக்கட் வழங்க வேண்டும்: மாற்றுத் திறானாளிகள் சங்கம்

11.04.2015
முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ளது போல் இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை கட்டணத்தில் ரயில்டிக்கட் பெற மத்திய, மாநில அரசுகள் வசதி செய்து தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறளானிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதி கூட்ட அரங்கில் தமிழ்நாடு அனைத்து வரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக்குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமை வகித்துப் பேசினார். மாநில துணைத் தலைவர் தே.லட்சுமணன், செயலாளர் எஸ்.நம்புராஜன், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ராஜா, நிர்வாகிகள் ராமகுமார், எழில்நிலவன், வீரமணி, ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அண்ணாமலைப் பல்கலையில் அனைத்து கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தளம், மூன்று சக்கர வாகனம், நவீன கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்; கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க அரசாணைப்படி மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்; நகராட்சி மற்றும் பேரூராட்சி

பேருந்து நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யோக கழிப்பறைகள் இல்லை. எனவே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசு கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment