FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, April 12, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு இணையதளத்தில் சலுகை டிக்கட் வழங்க வேண்டும்: மாற்றுத் திறானாளிகள் சங்கம்

11.04.2015
முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ளது போல் இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை கட்டணத்தில் ரயில்டிக்கட் பெற மத்திய, மாநில அரசுகள் வசதி செய்து தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறளானிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதி கூட்ட அரங்கில் தமிழ்நாடு அனைத்து வரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக்குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமை வகித்துப் பேசினார். மாநில துணைத் தலைவர் தே.லட்சுமணன், செயலாளர் எஸ்.நம்புராஜன், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ராஜா, நிர்வாகிகள் ராமகுமார், எழில்நிலவன், வீரமணி, ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அண்ணாமலைப் பல்கலையில் அனைத்து கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தளம், மூன்று சக்கர வாகனம், நவீன கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்; கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க அரசாணைப்படி மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்; நகராட்சி மற்றும் பேரூராட்சி

பேருந்து நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யோக கழிப்பறைகள் இல்லை. எனவே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசு கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment