FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, April 2, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் பணி துவக்கம்

02.04.2015 கோவை, : 
கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ்பாஸ் அட்டைகள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015-16ம் ஆண்டுக்கான இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கும் பணிகள் நேற்று துவங்கியது. இதில் முதற்கட்டமாக பார்வையற்ற 300 பேருக்கு இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கூறியதாவது:
கோவையில் ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் கணக்கெடுப்பு பணிகளும், புதுப்பிக்கும் பணிகளும் நடத்தப்பட்ட வருகிறது. இந்த ஆண்டிற்கு புதிய பஸ்பாஸ் அட்டைகள் மற்றும் புதுப்பித்தல் என மொத்தம் 874 பேருக்கு இலவச பஸ்பாஸ் கேட்டு போக்குவரத்து துறையிடம் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பார்வையற்றவர்கள் 542 பேர், மனவளர்ச்சி குன்றியவர்கள் 93 பேர், கை, கால்கள் ஊனமுற்றவர்கள் 129 பேர் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் 100 பேர் 874 பேருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக பார்வையற்றவர்கள் 300 பேருக்கு நேற்று இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த வார இறுதிக்குள் விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ்பாஸ் அட்டைகள் விநியோகம் செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment