FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, April 2, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் பணி துவக்கம்

02.04.2015 கோவை, : 
கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ்பாஸ் அட்டைகள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015-16ம் ஆண்டுக்கான இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கும் பணிகள் நேற்று துவங்கியது. இதில் முதற்கட்டமாக பார்வையற்ற 300 பேருக்கு இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கூறியதாவது:
கோவையில் ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் கணக்கெடுப்பு பணிகளும், புதுப்பிக்கும் பணிகளும் நடத்தப்பட்ட வருகிறது. இந்த ஆண்டிற்கு புதிய பஸ்பாஸ் அட்டைகள் மற்றும் புதுப்பித்தல் என மொத்தம் 874 பேருக்கு இலவச பஸ்பாஸ் கேட்டு போக்குவரத்து துறையிடம் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பார்வையற்றவர்கள் 542 பேர், மனவளர்ச்சி குன்றியவர்கள் 93 பேர், கை, கால்கள் ஊனமுற்றவர்கள் 129 பேர் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் 100 பேர் 874 பேருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக பார்வையற்றவர்கள் 300 பேருக்கு நேற்று இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த வார இறுதிக்குள் விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ்பாஸ் அட்டைகள் விநியோகம் செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment