FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, April 2, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் பணி துவக்கம்

02.04.2015 கோவை, : 
கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ்பாஸ் அட்டைகள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015-16ம் ஆண்டுக்கான இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கும் பணிகள் நேற்று துவங்கியது. இதில் முதற்கட்டமாக பார்வையற்ற 300 பேருக்கு இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கூறியதாவது:
கோவையில் ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் கணக்கெடுப்பு பணிகளும், புதுப்பிக்கும் பணிகளும் நடத்தப்பட்ட வருகிறது. இந்த ஆண்டிற்கு புதிய பஸ்பாஸ் அட்டைகள் மற்றும் புதுப்பித்தல் என மொத்தம் 874 பேருக்கு இலவச பஸ்பாஸ் கேட்டு போக்குவரத்து துறையிடம் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பார்வையற்றவர்கள் 542 பேர், மனவளர்ச்சி குன்றியவர்கள் 93 பேர், கை, கால்கள் ஊனமுற்றவர்கள் 129 பேர் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் 100 பேர் 874 பேருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக பார்வையற்றவர்கள் 300 பேருக்கு நேற்று இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த வார இறுதிக்குள் விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ்பாஸ் அட்டைகள் விநியோகம் செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment