FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, April 26, 2015

உயர்த்தி அறிவிக்கப்பட்ட உதவித்தொகை ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

25.04.2015, புதுச்சேரி
உயர்த்தி அறிவிக்கப்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

நடைமுறைக்கு வரும்
புதுச்சேரி சட்டசபையில் கடந்த 22–ந் தேதி முதல்–அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்–அமைச்சர் ரங்கசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வருகிற ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

அனைத்து அறிவிப்புகளும்...
மேலும் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:–

கேள்வி:– பட்ஜெட் அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனவே?

பதில்:– அனைத்து அறிவிப்புகளும் வருகிற 2016ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்

No comments:

Post a Comment