FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, May 11, 2015

அணையில் மூழ்கி இரு சிறுமியர் பலி: வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தாயார் கண் முன் நடந்த பரிதாபம்

11.05.2015, பென்னாகரம்: 
தாய் கண் முன்பாக, அணையில் மூழ்கி, இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தர்மபுரி மாவட்டம், பெரும்பாலையை அடுத்த, கே.புதுாரை சேர்ந்த மகாலிங்கம் மனைவி கலைச்செல்வி. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவர், தன் மகள்கள் ரூபாராணி, 8, மேகலா, 5 ஆகியோருடன், நாகவதி அணைக்கு துணி துவைக்க சென்றார். அப்போது, ரூபாராணி, மேகலா ஆகியோர், அணையில் குளிக்க இறங்கியுள்ளனர். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற, இரு சிறுமிகளும், பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தனர்.வாய் பேசமுடியாத கலைச்செல்வி, செய்கை மூலமாக, அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள், அணையின் தண்ணீரில் மூழ்கி, ரூபாராணி, மேகலா ஆகியோரை இறந்த நிலையில் மீட்டனர்.இதுகுறித்து, பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர். தாய் கண் முன்னே, இரு குழந்தைகள், தண்ணீரில் மூழ்கி இறந்தது, கே.புதுார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment