FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, May 11, 2015

அணையில் மூழ்கி இரு சிறுமியர் பலி: வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தாயார் கண் முன் நடந்த பரிதாபம்

11.05.2015, பென்னாகரம்: 
தாய் கண் முன்பாக, அணையில் மூழ்கி, இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தர்மபுரி மாவட்டம், பெரும்பாலையை அடுத்த, கே.புதுாரை சேர்ந்த மகாலிங்கம் மனைவி கலைச்செல்வி. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவர், தன் மகள்கள் ரூபாராணி, 8, மேகலா, 5 ஆகியோருடன், நாகவதி அணைக்கு துணி துவைக்க சென்றார். அப்போது, ரூபாராணி, மேகலா ஆகியோர், அணையில் குளிக்க இறங்கியுள்ளனர். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற, இரு சிறுமிகளும், பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தனர்.வாய் பேசமுடியாத கலைச்செல்வி, செய்கை மூலமாக, அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள், அணையின் தண்ணீரில் மூழ்கி, ரூபாராணி, மேகலா ஆகியோரை இறந்த நிலையில் மீட்டனர்.இதுகுறித்து, பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர். தாய் கண் முன்னே, இரு குழந்தைகள், தண்ணீரில் மூழ்கி இறந்தது, கே.புதுார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment