FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, May 22, 2015

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: கோவை காதுகேளாதோர் பள்ளி மாணவர் மாநிலத்தில் முதலிடம் 400-க்கு 385 மதிப்பெண் பெற்று சாதனை


கோவை,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கோவை காதுகேளாதோர் பள்ளி மாணவர் மிதுன் கிருஷ்ணா 400-க்கு 385 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். எதிர்காலத்தில் வங்கி பணிக்கு செல்வதற்கு ஆர்வமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மாநில அளவில் முதலிடம்

காதுகேளாதோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில மொழி பாடம் கிடையாது. தமிழ், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களுக்கு மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும்.

மாநில அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் கோவை வரதராஜபுரத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி காதுகேளாதோர் பள்ளி மாணவர் மிதுன்கிருஷ்ணா 400-க்கு 385 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-88, கணிதம்-97, அறிவியல்-100, சமூக அறிவியல்-100.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவரை, பள்ளி தலைமை ஆசிரியை அமிர்தவல்லி, ஆசிரியை சசிகலா ஆகியோர் பாராட்டினார்கள். மாணவரின் தந்தை வித்யாதர், தாய் சுகுணா ஆகியோர் மகனுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

வங்கி பணிக்கு ஆர்வம்

மாணவர் மிதுன் கிருஷ்ணா ஆசிரியை சசிகலாவின் மொழிபெயர்ப்பு உதவியுடன் கூறியதாவது:-

மாநில அளவில் இந்த சாதனையை படைப்பதற்கு காரணம் எனது தலைமை ஆசிரியை அமிர்த வல்லி, வகுப்பு ஆசிரியை சசிகலா ஆகியோர் தான். பாடங்களை மிகவும் புரியும் விதத்தில் சொல்லிக் கொடுத்தனர். அதிலும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எதிர்காலத்தில் பி.காம் படித்து, வங்கிப்பணியில் சேர வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளேன். தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சாதிக்க முடியும்.

இவ்வாறு மாணவர் மிதுன் கிருஷ்ணா கூறினார்.

மாணவரின் தந்தை வித்யாதர், தாய் சுகுணா ஆகியோர் கூறும்போது, குழந்தையாக இருக்கும் போதே மிதுன்கிருஷ்ணாவுக்கு காது கேட்காது. இருந்தாலும் சொல்லும் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்வான். அறிவாற்றலுடன் காணப்பட்ட எனது மகன் எதிர்காலத்தில் நிச்சயம் சாதனை படைப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. மாநில அளவில் மிதுன் கிருஷ்ணா சாதனை படைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

மேலும் 2 பேர் சாதனை

கோவை கவுண்டம்பாளையம், சேரன்நகரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கம் காது கேளாதோர் பள்ளி மாணவர் எம்.பிரவீன்குமார் 361 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 8-வது இடத்தை பிடித் துள்ளார். 90.2 சதவீத மதிப்பெண் பெற்று மாநில அளவில சாதனை படைத்த மாணவர் பிரவீன்குமாரை, பள்ளி முதல்வர் சந்தரகாந்தி பாராட்டினார்.

கோவை கஸ்தூரிபா காந்தி பள்ளி மாணவி ஆயிஷாசித்திகா, மாநில அளவில் 10-வது இடத்தை பெற் றுள்ளார். இவர் 357 மதிப்பெண் எடுத்துள்ளார். கோவை பீளமேடு ஹோப்கல்லூரி பகுதியை சேர்ந்த இந்த மாணவியின் தாய் பல்கீஸ் பேகம் தனியார் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

மாணவி ஆயிஷா சித்திகா கூறும்போது, ‘மாநில அளவில் 10-வது இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் தையல் கலை படித்து, ஆடை அலங்கார வடிவமைப்பு பிரிவில் சாதனை படைக்க வேண்டும் என்பதே லட்சியமாக கொண்டுள்ளேன் என்றார்.

காதுகேளாதோர் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் சாதனை படைத்து இருப் பதற்கு கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
-Daily Thanthi

No comments:

Post a Comment