FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, May 22, 2015

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: கோவை காதுகேளாதோர் பள்ளி மாணவர் மாநிலத்தில் முதலிடம் 400-க்கு 385 மதிப்பெண் பெற்று சாதனை


கோவை,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கோவை காதுகேளாதோர் பள்ளி மாணவர் மிதுன் கிருஷ்ணா 400-க்கு 385 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். எதிர்காலத்தில் வங்கி பணிக்கு செல்வதற்கு ஆர்வமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மாநில அளவில் முதலிடம்

காதுகேளாதோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில மொழி பாடம் கிடையாது. தமிழ், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களுக்கு மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும்.

மாநில அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் கோவை வரதராஜபுரத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி காதுகேளாதோர் பள்ளி மாணவர் மிதுன்கிருஷ்ணா 400-க்கு 385 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-88, கணிதம்-97, அறிவியல்-100, சமூக அறிவியல்-100.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவரை, பள்ளி தலைமை ஆசிரியை அமிர்தவல்லி, ஆசிரியை சசிகலா ஆகியோர் பாராட்டினார்கள். மாணவரின் தந்தை வித்யாதர், தாய் சுகுணா ஆகியோர் மகனுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

வங்கி பணிக்கு ஆர்வம்

மாணவர் மிதுன் கிருஷ்ணா ஆசிரியை சசிகலாவின் மொழிபெயர்ப்பு உதவியுடன் கூறியதாவது:-

மாநில அளவில் இந்த சாதனையை படைப்பதற்கு காரணம் எனது தலைமை ஆசிரியை அமிர்த வல்லி, வகுப்பு ஆசிரியை சசிகலா ஆகியோர் தான். பாடங்களை மிகவும் புரியும் விதத்தில் சொல்லிக் கொடுத்தனர். அதிலும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எதிர்காலத்தில் பி.காம் படித்து, வங்கிப்பணியில் சேர வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளேன். தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சாதிக்க முடியும்.

இவ்வாறு மாணவர் மிதுன் கிருஷ்ணா கூறினார்.

மாணவரின் தந்தை வித்யாதர், தாய் சுகுணா ஆகியோர் கூறும்போது, குழந்தையாக இருக்கும் போதே மிதுன்கிருஷ்ணாவுக்கு காது கேட்காது. இருந்தாலும் சொல்லும் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்வான். அறிவாற்றலுடன் காணப்பட்ட எனது மகன் எதிர்காலத்தில் நிச்சயம் சாதனை படைப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. மாநில அளவில் மிதுன் கிருஷ்ணா சாதனை படைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

மேலும் 2 பேர் சாதனை

கோவை கவுண்டம்பாளையம், சேரன்நகரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கம் காது கேளாதோர் பள்ளி மாணவர் எம்.பிரவீன்குமார் 361 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 8-வது இடத்தை பிடித் துள்ளார். 90.2 சதவீத மதிப்பெண் பெற்று மாநில அளவில சாதனை படைத்த மாணவர் பிரவீன்குமாரை, பள்ளி முதல்வர் சந்தரகாந்தி பாராட்டினார்.

கோவை கஸ்தூரிபா காந்தி பள்ளி மாணவி ஆயிஷாசித்திகா, மாநில அளவில் 10-வது இடத்தை பெற் றுள்ளார். இவர் 357 மதிப்பெண் எடுத்துள்ளார். கோவை பீளமேடு ஹோப்கல்லூரி பகுதியை சேர்ந்த இந்த மாணவியின் தாய் பல்கீஸ் பேகம் தனியார் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

மாணவி ஆயிஷா சித்திகா கூறும்போது, ‘மாநில அளவில் 10-வது இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் தையல் கலை படித்து, ஆடை அலங்கார வடிவமைப்பு பிரிவில் சாதனை படைக்க வேண்டும் என்பதே லட்சியமாக கொண்டுள்ளேன் என்றார்.

காதுகேளாதோர் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் சாதனை படைத்து இருப் பதற்கு கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
-Daily Thanthi

No comments:

Post a Comment