FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, May 22, 2015

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: கோவை காதுகேளாதோர் பள்ளி மாணவர் மாநிலத்தில் முதலிடம் 400-க்கு 385 மதிப்பெண் பெற்று சாதனை


கோவை,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கோவை காதுகேளாதோர் பள்ளி மாணவர் மிதுன் கிருஷ்ணா 400-க்கு 385 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். எதிர்காலத்தில் வங்கி பணிக்கு செல்வதற்கு ஆர்வமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மாநில அளவில் முதலிடம்

காதுகேளாதோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில மொழி பாடம் கிடையாது. தமிழ், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களுக்கு மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும்.

மாநில அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் கோவை வரதராஜபுரத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி காதுகேளாதோர் பள்ளி மாணவர் மிதுன்கிருஷ்ணா 400-க்கு 385 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-88, கணிதம்-97, அறிவியல்-100, சமூக அறிவியல்-100.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவரை, பள்ளி தலைமை ஆசிரியை அமிர்தவல்லி, ஆசிரியை சசிகலா ஆகியோர் பாராட்டினார்கள். மாணவரின் தந்தை வித்யாதர், தாய் சுகுணா ஆகியோர் மகனுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

வங்கி பணிக்கு ஆர்வம்

மாணவர் மிதுன் கிருஷ்ணா ஆசிரியை சசிகலாவின் மொழிபெயர்ப்பு உதவியுடன் கூறியதாவது:-

மாநில அளவில் இந்த சாதனையை படைப்பதற்கு காரணம் எனது தலைமை ஆசிரியை அமிர்த வல்லி, வகுப்பு ஆசிரியை சசிகலா ஆகியோர் தான். பாடங்களை மிகவும் புரியும் விதத்தில் சொல்லிக் கொடுத்தனர். அதிலும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எதிர்காலத்தில் பி.காம் படித்து, வங்கிப்பணியில் சேர வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளேன். தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சாதிக்க முடியும்.

இவ்வாறு மாணவர் மிதுன் கிருஷ்ணா கூறினார்.

மாணவரின் தந்தை வித்யாதர், தாய் சுகுணா ஆகியோர் கூறும்போது, குழந்தையாக இருக்கும் போதே மிதுன்கிருஷ்ணாவுக்கு காது கேட்காது. இருந்தாலும் சொல்லும் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்வான். அறிவாற்றலுடன் காணப்பட்ட எனது மகன் எதிர்காலத்தில் நிச்சயம் சாதனை படைப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. மாநில அளவில் மிதுன் கிருஷ்ணா சாதனை படைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

மேலும் 2 பேர் சாதனை

கோவை கவுண்டம்பாளையம், சேரன்நகரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கம் காது கேளாதோர் பள்ளி மாணவர் எம்.பிரவீன்குமார் 361 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 8-வது இடத்தை பிடித் துள்ளார். 90.2 சதவீத மதிப்பெண் பெற்று மாநில அளவில சாதனை படைத்த மாணவர் பிரவீன்குமாரை, பள்ளி முதல்வர் சந்தரகாந்தி பாராட்டினார்.

கோவை கஸ்தூரிபா காந்தி பள்ளி மாணவி ஆயிஷாசித்திகா, மாநில அளவில் 10-வது இடத்தை பெற் றுள்ளார். இவர் 357 மதிப்பெண் எடுத்துள்ளார். கோவை பீளமேடு ஹோப்கல்லூரி பகுதியை சேர்ந்த இந்த மாணவியின் தாய் பல்கீஸ் பேகம் தனியார் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

மாணவி ஆயிஷா சித்திகா கூறும்போது, ‘மாநில அளவில் 10-வது இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் தையல் கலை படித்து, ஆடை அலங்கார வடிவமைப்பு பிரிவில் சாதனை படைக்க வேண்டும் என்பதே லட்சியமாக கொண்டுள்ளேன் என்றார்.

காதுகேளாதோர் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் சாதனை படைத்து இருப் பதற்கு கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
-Daily Thanthi

No comments:

Post a Comment