FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, May 22, 2015

"மாற்றுத்திறனாளி சகோதரனால் முதலிடம் பெற்றேன்': பார்வைத்திறன் இழந்த மாணவி பெருமிதம்

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டேன். என் பெற்றோர் இறக்கும்போது 7 மாதக் குழந்தையாக இருந்த என்னை, என் இரண்டாவது சகோதரர் வெங்கடேசன்தான் வளர்த்து வருகிறார்.
அவரும் என்னைப் போலவே பார்வைத்திறன் குறைபாடு உடையவர். அரக்கோணம் தாலுகாவில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மளிகைக் கடையில் நாளொன்றுக்கு ரூ.120 சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.
அதைக் கொண்டு அவர் குடும்பத்தையும், என்னையும் கவனித்து வருகிறார்.
அவர், மாணவர் பருவத்தில் இருந்தபோது படிப்பதற்கு இதுபோன்ற சிறப்புப் பள்ளிகள் இல்லாத காரணத்தினால் அவரால் படிக்க முடியவில்லை. அதனால் என்னைப் படிக்க வைக்க விரும்பினார்.
எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புகிறேன். எங்களைப் போன்று வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் ஏழைகளை கல்வித் தரத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் முன்னேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார்.
இவர் பெற்ற மதிப்பெண்
தமிழ்- 91, ஆங்கிலம் 89, கணிதம்- 96, அறிவியல்-99, சமூகஅறிவியல்-96.
இதே பள்ளியைச் சேர்ந்த எம்.முனீஸ்வரி 459 மதிப்பெண் பெற்று மாநில அளவில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment