FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, May 22, 2015

"மாற்றுத்திறனாளி சகோதரனால் முதலிடம் பெற்றேன்': பார்வைத்திறன் இழந்த மாணவி பெருமிதம்

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டேன். என் பெற்றோர் இறக்கும்போது 7 மாதக் குழந்தையாக இருந்த என்னை, என் இரண்டாவது சகோதரர் வெங்கடேசன்தான் வளர்த்து வருகிறார்.
அவரும் என்னைப் போலவே பார்வைத்திறன் குறைபாடு உடையவர். அரக்கோணம் தாலுகாவில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மளிகைக் கடையில் நாளொன்றுக்கு ரூ.120 சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.
அதைக் கொண்டு அவர் குடும்பத்தையும், என்னையும் கவனித்து வருகிறார்.
அவர், மாணவர் பருவத்தில் இருந்தபோது படிப்பதற்கு இதுபோன்ற சிறப்புப் பள்ளிகள் இல்லாத காரணத்தினால் அவரால் படிக்க முடியவில்லை. அதனால் என்னைப் படிக்க வைக்க விரும்பினார்.
எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புகிறேன். எங்களைப் போன்று வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் ஏழைகளை கல்வித் தரத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் முன்னேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார்.
இவர் பெற்ற மதிப்பெண்
தமிழ்- 91, ஆங்கிலம் 89, கணிதம்- 96, அறிவியல்-99, சமூகஅறிவியல்-96.
இதே பள்ளியைச் சேர்ந்த எம்.முனீஸ்வரி 459 மதிப்பெண் பெற்று மாநில அளவில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment