FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, May 22, 2015

"மாற்றுத்திறனாளி சகோதரனால் முதலிடம் பெற்றேன்': பார்வைத்திறன் இழந்த மாணவி பெருமிதம்

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டேன். என் பெற்றோர் இறக்கும்போது 7 மாதக் குழந்தையாக இருந்த என்னை, என் இரண்டாவது சகோதரர் வெங்கடேசன்தான் வளர்த்து வருகிறார்.
அவரும் என்னைப் போலவே பார்வைத்திறன் குறைபாடு உடையவர். அரக்கோணம் தாலுகாவில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மளிகைக் கடையில் நாளொன்றுக்கு ரூ.120 சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.
அதைக் கொண்டு அவர் குடும்பத்தையும், என்னையும் கவனித்து வருகிறார்.
அவர், மாணவர் பருவத்தில் இருந்தபோது படிப்பதற்கு இதுபோன்ற சிறப்புப் பள்ளிகள் இல்லாத காரணத்தினால் அவரால் படிக்க முடியவில்லை. அதனால் என்னைப் படிக்க வைக்க விரும்பினார்.
எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புகிறேன். எங்களைப் போன்று வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் ஏழைகளை கல்வித் தரத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் முன்னேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார்.
இவர் பெற்ற மதிப்பெண்
தமிழ்- 91, ஆங்கிலம் 89, கணிதம்- 96, அறிவியல்-99, சமூகஅறிவியல்-96.
இதே பள்ளியைச் சேர்ந்த எம்.முனீஸ்வரி 459 மதிப்பெண் பெற்று மாநில அளவில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment