FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, May 24, 2015

காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாதனை : எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் எதிர்காலம்

22.05.2015 ஊட்டி: 
ஊட்டியில் உள்ள காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கல்வித் துறையின் ஒத்துழைப்பு அவசியமாகி உள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. துவக்கத்தில், அதிகளவு மாணவர் எண்ணிக்கையுடன் சிறப்பாக செயல்பட்டு வந்த இப்பள்ளி, ஆசிரியர்கள் மத்தியில் நிலவிய 'ஈகோ' பிரச்னையால் மதிப்பிழந்தது.இருப்பினும், இப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக மீண் டும், சிறப்பான முறையில் செயல்பட துவங்கியது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, தேர்வெழுதிய ஐந்து மாணவர்களும் தோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு தேர்வெழுதியஐந்து மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

இதில், பள்ளியின் வாட்ச் மேனாக பணிபுரிந்து வரும் சுப்ரமணி என்பவரது மகன் சேதுபதி அதிகபட்சம், 273 மதிப்பெண் பெற்று, பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.ஒத்துழைக்குமா கல்வித் துறைதற்போது, இப்பள்ளியில், 18 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். காது கேளாத, வாய் பேச முடியாத மாணவ, மாணவியருக்கென பிரத்யேக பயிற்சி வழங்கி வரும் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகளவில் படிக்கின்றனர்.'ஊட்டி வட்டத்தில் மட்டும், 27 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர்' என, கல்வித் துறை கணக்கு காட்டியுள்ளது. எனவே, தனியார், உதவி பெறும் பள்ளிகளில், படிக்கும் வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியரை இப்பள்ளியில் இணைப்பதன், பள்ளியின் செயல்பாடு மேம்பட வாய்ப்புள்ளது.

இலவச கல்வியுடன் விடுதி...

பள்ளி தலைமையாசிரியை மரிய பாஸ்கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; நடப்பாண்டு, 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; மூன்று வயதிற்கு மேல் மாணவ, மாணவியர் சேர்த்து கொள்ளப்படுவர். உணவு, சீருடை, நோட்டு புத்தகம், செவித் துணை கருவி மற்றும் தங்கு விடுதியில் வசதியாக தங்க இடம் போன்றவை இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 0423 -2450700, 94875-55948 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment