FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, May 24, 2015

காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாதனை : எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் எதிர்காலம்

22.05.2015 ஊட்டி: 
ஊட்டியில் உள்ள காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கல்வித் துறையின் ஒத்துழைப்பு அவசியமாகி உள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. துவக்கத்தில், அதிகளவு மாணவர் எண்ணிக்கையுடன் சிறப்பாக செயல்பட்டு வந்த இப்பள்ளி, ஆசிரியர்கள் மத்தியில் நிலவிய 'ஈகோ' பிரச்னையால் மதிப்பிழந்தது.இருப்பினும், இப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக மீண் டும், சிறப்பான முறையில் செயல்பட துவங்கியது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, தேர்வெழுதிய ஐந்து மாணவர்களும் தோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு தேர்வெழுதியஐந்து மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

இதில், பள்ளியின் வாட்ச் மேனாக பணிபுரிந்து வரும் சுப்ரமணி என்பவரது மகன் சேதுபதி அதிகபட்சம், 273 மதிப்பெண் பெற்று, பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.ஒத்துழைக்குமா கல்வித் துறைதற்போது, இப்பள்ளியில், 18 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். காது கேளாத, வாய் பேச முடியாத மாணவ, மாணவியருக்கென பிரத்யேக பயிற்சி வழங்கி வரும் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகளவில் படிக்கின்றனர்.'ஊட்டி வட்டத்தில் மட்டும், 27 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர்' என, கல்வித் துறை கணக்கு காட்டியுள்ளது. எனவே, தனியார், உதவி பெறும் பள்ளிகளில், படிக்கும் வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியரை இப்பள்ளியில் இணைப்பதன், பள்ளியின் செயல்பாடு மேம்பட வாய்ப்புள்ளது.

இலவச கல்வியுடன் விடுதி...

பள்ளி தலைமையாசிரியை மரிய பாஸ்கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; நடப்பாண்டு, 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; மூன்று வயதிற்கு மேல் மாணவ, மாணவியர் சேர்த்து கொள்ளப்படுவர். உணவு, சீருடை, நோட்டு புத்தகம், செவித் துணை கருவி மற்றும் தங்கு விடுதியில் வசதியாக தங்க இடம் போன்றவை இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 0423 -2450700, 94875-55948 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment