FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, May 24, 2015

காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாதனை : எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் எதிர்காலம்

22.05.2015 ஊட்டி: 
ஊட்டியில் உள்ள காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கல்வித் துறையின் ஒத்துழைப்பு அவசியமாகி உள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. துவக்கத்தில், அதிகளவு மாணவர் எண்ணிக்கையுடன் சிறப்பாக செயல்பட்டு வந்த இப்பள்ளி, ஆசிரியர்கள் மத்தியில் நிலவிய 'ஈகோ' பிரச்னையால் மதிப்பிழந்தது.இருப்பினும், இப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக மீண் டும், சிறப்பான முறையில் செயல்பட துவங்கியது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, தேர்வெழுதிய ஐந்து மாணவர்களும் தோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு தேர்வெழுதியஐந்து மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

இதில், பள்ளியின் வாட்ச் மேனாக பணிபுரிந்து வரும் சுப்ரமணி என்பவரது மகன் சேதுபதி அதிகபட்சம், 273 மதிப்பெண் பெற்று, பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.ஒத்துழைக்குமா கல்வித் துறைதற்போது, இப்பள்ளியில், 18 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். காது கேளாத, வாய் பேச முடியாத மாணவ, மாணவியருக்கென பிரத்யேக பயிற்சி வழங்கி வரும் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகளவில் படிக்கின்றனர்.'ஊட்டி வட்டத்தில் மட்டும், 27 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர்' என, கல்வித் துறை கணக்கு காட்டியுள்ளது. எனவே, தனியார், உதவி பெறும் பள்ளிகளில், படிக்கும் வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியரை இப்பள்ளியில் இணைப்பதன், பள்ளியின் செயல்பாடு மேம்பட வாய்ப்புள்ளது.

இலவச கல்வியுடன் விடுதி...

பள்ளி தலைமையாசிரியை மரிய பாஸ்கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; நடப்பாண்டு, 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; மூன்று வயதிற்கு மேல் மாணவ, மாணவியர் சேர்த்து கொள்ளப்படுவர். உணவு, சீருடை, நோட்டு புத்தகம், செவித் துணை கருவி மற்றும் தங்கு விடுதியில் வசதியாக தங்க இடம் போன்றவை இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 0423 -2450700, 94875-55948 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment