FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, May 24, 2015

காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாதனை : எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் எதிர்காலம்

22.05.2015 ஊட்டி: 
ஊட்டியில் உள்ள காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கல்வித் துறையின் ஒத்துழைப்பு அவசியமாகி உள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. துவக்கத்தில், அதிகளவு மாணவர் எண்ணிக்கையுடன் சிறப்பாக செயல்பட்டு வந்த இப்பள்ளி, ஆசிரியர்கள் மத்தியில் நிலவிய 'ஈகோ' பிரச்னையால் மதிப்பிழந்தது.இருப்பினும், இப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக மீண் டும், சிறப்பான முறையில் செயல்பட துவங்கியது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, தேர்வெழுதிய ஐந்து மாணவர்களும் தோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு தேர்வெழுதியஐந்து மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

இதில், பள்ளியின் வாட்ச் மேனாக பணிபுரிந்து வரும் சுப்ரமணி என்பவரது மகன் சேதுபதி அதிகபட்சம், 273 மதிப்பெண் பெற்று, பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.ஒத்துழைக்குமா கல்வித் துறைதற்போது, இப்பள்ளியில், 18 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். காது கேளாத, வாய் பேச முடியாத மாணவ, மாணவியருக்கென பிரத்யேக பயிற்சி வழங்கி வரும் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகளவில் படிக்கின்றனர்.'ஊட்டி வட்டத்தில் மட்டும், 27 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர்' என, கல்வித் துறை கணக்கு காட்டியுள்ளது. எனவே, தனியார், உதவி பெறும் பள்ளிகளில், படிக்கும் வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியரை இப்பள்ளியில் இணைப்பதன், பள்ளியின் செயல்பாடு மேம்பட வாய்ப்புள்ளது.

இலவச கல்வியுடன் விடுதி...

பள்ளி தலைமையாசிரியை மரிய பாஸ்கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; நடப்பாண்டு, 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; மூன்று வயதிற்கு மேல் மாணவ, மாணவியர் சேர்த்து கொள்ளப்படுவர். உணவு, சீருடை, நோட்டு புத்தகம், செவித் துணை கருவி மற்றும் தங்கு விடுதியில் வசதியாக தங்க இடம் போன்றவை இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 0423 -2450700, 94875-55948 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment