FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, May 25, 2015

ரயில் நிலையங்களில் சிறப்பு சலுகை கட்டணம் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு அதிகாரிகள் அலட்சியம்

திருச்சி: திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு சலுகை கட்டணம் பெற அலை கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 17 லட்சம் முதல் 24 லட்சம் வரை மாற்றுதிறனாளிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தொிவிக்கிறது. தமிழக அரசின் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் பரிசோதித்து அதன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரயிலில் சலுகை கட்டணம் பெறவும் மருத்துவ சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையில் ரூ.1000த்தில் ரூ.500 மத்திய அரசின் பங்களிப்பாக உள்ளது. ரயில்வே துறை வழங்கும் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு மற்றும் முன்பதி வில்லா பெட்டிகளில் 75 சதவீதமும், ஏசி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை உடன் செல்லும் ஒருவருக்கு பொருந்தும். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் டிக்கெட் கவுன்டருக்கு சென்று டிக்கெட் பெறுவதில் சிரமம் உள்ளதால் எங்களுக்கும் இணையதளத்தில் டிக்கெட் பெறும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என ரயில் நிர்வாகத்திற்கு கோாிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட ரயில்வே நிா்வா கம் ஸ்மாா்ட் காா்டு சிஸ்டத்தை மாற்றுதிறனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. மாற்றுதிறனாளிகளுக்கான ஸ்மாா்ட் காா்டு பெற மத்திய அரசு அறிவித்துள்ள ஆவணங்களுடன் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களை அணுகினால் ஜங்ஷனில் உள்ள அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு திருப்பி அனுப்பி விடுகின்றனா். இதனால் திருச்சி ரயில்வே கோட்டத்திற் குட்பட்ட விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பல கிலோ மீட்டா் அலைந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரவேண்டியுள்ளது. அங்கு நிலைய வணிக வளாகத்தின் மாடியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்கின்றனர். அங்கு பணியில் உள்ள அலுவலர்கள் பல்வேறு காரணங்கள் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் அலை கழிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். ரயில் நிலையங்களில் சிறப்பு சலுகை கட்டணம் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு

போராட திட்டம்
இது குறித்து மாற்றுதிறனாளிகள் சங்க தலைவா் தீபக் கூறும் போது, ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ள மருத்துவ மற்றும் வயது சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் போட்டோ ஆகியவற்று டன் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களை அணுகினால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கூறி அனுப்பி விடுகின்றனா். இதனால் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வரும் என்னைப் போன்றவர்கள் சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இது போன்ற நிகழ்வு தொடருமேயானால் போராட்டங்கள் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. திருச்சி கோட்டம் மட்டுமில்லை அனைத்து ரயில் நிலையங்களிலும் இது போன்றுதான் நடக்கிறது என்று தெரிவித்தார்.

மாடியில் அலுவலகம் படியில் தவழும் அவலம்...
திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் வணிக வளாக மாடியில் உள்ளது. அங்கு நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மாடிப்படியில் தவழ்ந்து சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே ஐநா உாிமை உடன் படிக்கையை மீறி மாடிப்பகுதியில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரை தளத்தில் இயங்க வேண்டும் என்பதே மாற்றுதிறனாளிகளின் கோாிக்கையாக உள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மாடியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை கீழ்ப்பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் 30 மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்துள்ளனர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக மாற்றுத்திறனாளிகள் கூறினர்.

No comments:

Post a Comment