FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, May 25, 2015

ரயில் நிலையங்களில் சிறப்பு சலுகை கட்டணம் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு அதிகாரிகள் அலட்சியம்

திருச்சி: திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு சலுகை கட்டணம் பெற அலை கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 17 லட்சம் முதல் 24 லட்சம் வரை மாற்றுதிறனாளிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தொிவிக்கிறது. தமிழக அரசின் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் பரிசோதித்து அதன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரயிலில் சலுகை கட்டணம் பெறவும் மருத்துவ சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையில் ரூ.1000த்தில் ரூ.500 மத்திய அரசின் பங்களிப்பாக உள்ளது. ரயில்வே துறை வழங்கும் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு மற்றும் முன்பதி வில்லா பெட்டிகளில் 75 சதவீதமும், ஏசி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை உடன் செல்லும் ஒருவருக்கு பொருந்தும். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் டிக்கெட் கவுன்டருக்கு சென்று டிக்கெட் பெறுவதில் சிரமம் உள்ளதால் எங்களுக்கும் இணையதளத்தில் டிக்கெட் பெறும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என ரயில் நிர்வாகத்திற்கு கோாிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட ரயில்வே நிா்வா கம் ஸ்மாா்ட் காா்டு சிஸ்டத்தை மாற்றுதிறனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. மாற்றுதிறனாளிகளுக்கான ஸ்மாா்ட் காா்டு பெற மத்திய அரசு அறிவித்துள்ள ஆவணங்களுடன் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களை அணுகினால் ஜங்ஷனில் உள்ள அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு திருப்பி அனுப்பி விடுகின்றனா். இதனால் திருச்சி ரயில்வே கோட்டத்திற் குட்பட்ட விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பல கிலோ மீட்டா் அலைந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரவேண்டியுள்ளது. அங்கு நிலைய வணிக வளாகத்தின் மாடியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்கின்றனர். அங்கு பணியில் உள்ள அலுவலர்கள் பல்வேறு காரணங்கள் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் அலை கழிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். ரயில் நிலையங்களில் சிறப்பு சலுகை கட்டணம் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு

போராட திட்டம்
இது குறித்து மாற்றுதிறனாளிகள் சங்க தலைவா் தீபக் கூறும் போது, ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ள மருத்துவ மற்றும் வயது சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் போட்டோ ஆகியவற்று டன் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களை அணுகினால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கூறி அனுப்பி விடுகின்றனா். இதனால் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வரும் என்னைப் போன்றவர்கள் சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இது போன்ற நிகழ்வு தொடருமேயானால் போராட்டங்கள் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. திருச்சி கோட்டம் மட்டுமில்லை அனைத்து ரயில் நிலையங்களிலும் இது போன்றுதான் நடக்கிறது என்று தெரிவித்தார்.

மாடியில் அலுவலகம் படியில் தவழும் அவலம்...
திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் வணிக வளாக மாடியில் உள்ளது. அங்கு நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மாடிப்படியில் தவழ்ந்து சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே ஐநா உாிமை உடன் படிக்கையை மீறி மாடிப்பகுதியில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரை தளத்தில் இயங்க வேண்டும் என்பதே மாற்றுதிறனாளிகளின் கோாிக்கையாக உள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மாடியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை கீழ்ப்பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் 30 மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்துள்ளனர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக மாற்றுத்திறனாளிகள் கூறினர்.

No comments:

Post a Comment