FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, May 25, 2015

ரயில் நிலையங்களில் சிறப்பு சலுகை கட்டணம் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு அதிகாரிகள் அலட்சியம்

திருச்சி: திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு சலுகை கட்டணம் பெற அலை கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 17 லட்சம் முதல் 24 லட்சம் வரை மாற்றுதிறனாளிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தொிவிக்கிறது. தமிழக அரசின் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் பரிசோதித்து அதன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரயிலில் சலுகை கட்டணம் பெறவும் மருத்துவ சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையில் ரூ.1000த்தில் ரூ.500 மத்திய அரசின் பங்களிப்பாக உள்ளது. ரயில்வே துறை வழங்கும் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு மற்றும் முன்பதி வில்லா பெட்டிகளில் 75 சதவீதமும், ஏசி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை உடன் செல்லும் ஒருவருக்கு பொருந்தும். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் டிக்கெட் கவுன்டருக்கு சென்று டிக்கெட் பெறுவதில் சிரமம் உள்ளதால் எங்களுக்கும் இணையதளத்தில் டிக்கெட் பெறும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என ரயில் நிர்வாகத்திற்கு கோாிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட ரயில்வே நிா்வா கம் ஸ்மாா்ட் காா்டு சிஸ்டத்தை மாற்றுதிறனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. மாற்றுதிறனாளிகளுக்கான ஸ்மாா்ட் காா்டு பெற மத்திய அரசு அறிவித்துள்ள ஆவணங்களுடன் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களை அணுகினால் ஜங்ஷனில் உள்ள அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு திருப்பி அனுப்பி விடுகின்றனா். இதனால் திருச்சி ரயில்வே கோட்டத்திற் குட்பட்ட விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பல கிலோ மீட்டா் அலைந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரவேண்டியுள்ளது. அங்கு நிலைய வணிக வளாகத்தின் மாடியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்கின்றனர். அங்கு பணியில் உள்ள அலுவலர்கள் பல்வேறு காரணங்கள் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் அலை கழிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். ரயில் நிலையங்களில் சிறப்பு சலுகை கட்டணம் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு

போராட திட்டம்
இது குறித்து மாற்றுதிறனாளிகள் சங்க தலைவா் தீபக் கூறும் போது, ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ள மருத்துவ மற்றும் வயது சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் போட்டோ ஆகியவற்று டன் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களை அணுகினால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கூறி அனுப்பி விடுகின்றனா். இதனால் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வரும் என்னைப் போன்றவர்கள் சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இது போன்ற நிகழ்வு தொடருமேயானால் போராட்டங்கள் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. திருச்சி கோட்டம் மட்டுமில்லை அனைத்து ரயில் நிலையங்களிலும் இது போன்றுதான் நடக்கிறது என்று தெரிவித்தார்.

மாடியில் அலுவலகம் படியில் தவழும் அவலம்...
திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் வணிக வளாக மாடியில் உள்ளது. அங்கு நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மாடிப்படியில் தவழ்ந்து சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே ஐநா உாிமை உடன் படிக்கையை மீறி மாடிப்பகுதியில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரை தளத்தில் இயங்க வேண்டும் என்பதே மாற்றுதிறனாளிகளின் கோாிக்கையாக உள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மாடியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை கீழ்ப்பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் 30 மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்துள்ளனர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக மாற்றுத்திறனாளிகள் கூறினர்.

No comments:

Post a Comment