FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, May 8, 2015

தாலி, தங்கத்துடன் திருமண நிதியுதவி

சென்னை, மே 8: 67 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 4 கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன்ரூ.26.5 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி காசோலைகளை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன் திருமண நிதியுதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (07.07.2015), சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள சுகாதாரத்துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு 67 பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய் பேசாத, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.25.5 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி கா சோலைகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து விதவை மறுமண நிதி உதவித் திட்டத்தின் 4 பயனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை கலெக்டர் எ.சுந்தரவல்லி மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்

சக்தி, மாநகராட்சி உறுப்பினர்கள் சின்னையா (எ) ஆறுமுகம், டி.சிவராஜ், நுங்கை மாறன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜாஸ்மின், மாவட்ட சமூக நல அலுவலர் வி.ஆர்.ஜெயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 comment: