FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, May 8, 2015

தாலி, தங்கத்துடன் திருமண நிதியுதவி

சென்னை, மே 8: 67 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 4 கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன்ரூ.26.5 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி காசோலைகளை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன் திருமண நிதியுதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (07.07.2015), சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள சுகாதாரத்துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு 67 பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய் பேசாத, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.25.5 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி கா சோலைகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து விதவை மறுமண நிதி உதவித் திட்டத்தின் 4 பயனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை கலெக்டர் எ.சுந்தரவல்லி மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்

சக்தி, மாநகராட்சி உறுப்பினர்கள் சின்னையா (எ) ஆறுமுகம், டி.சிவராஜ், நுங்கை மாறன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜாஸ்மின், மாவட்ட சமூக நல அலுவலர் வி.ஆர்.ஜெயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 comment: