FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, May 8, 2015

தாலி, தங்கத்துடன் திருமண நிதியுதவி

சென்னை, மே 8: 67 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 4 கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன்ரூ.26.5 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி காசோலைகளை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன் திருமண நிதியுதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (07.07.2015), சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள சுகாதாரத்துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு 67 பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய் பேசாத, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.25.5 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி கா சோலைகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து விதவை மறுமண நிதி உதவித் திட்டத்தின் 4 பயனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை கலெக்டர் எ.சுந்தரவல்லி மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்

சக்தி, மாநகராட்சி உறுப்பினர்கள் சின்னையா (எ) ஆறுமுகம், டி.சிவராஜ், நுங்கை மாறன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜாஸ்மின், மாவட்ட சமூக நல அலுவலர் வி.ஆர்.ஜெயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 comment: