FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, May 21, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்– சாதித்துக் காட்டிய கண்பார்வையற்ற கடவுளின் குழந்தைகள்

 21.05.2015, சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கண்பார்வையற்ற மாணவ, மாணவிகள் பலரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். 

கண்பார்வையற்ற நிலையிலும் தேர்வினை சிறப்பாக எழுதி முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்: 
1. ஆண்டாள் எம். - சென்னை - 477 மதிப்பெண்கள் 
2. மணிமேகலை எஸ். - விருதுநகர் - 474 மதிப்பெண்கள் 
3. கிரிஜா எஸ். - விருதுநகர் - 468 மதிப்பெண்கள் 
4. மொகம்மது அதுனன் பி. - திருவள்ளூர் - 466 மதிப்பெண்கள் 
5. தனலட்சுமி பி. - புதுச்சேரி - 465 மதிப்பெண்கள் 
6. அனுசுயா வி. - விருதுநகர் - 464 மதிப்பெண்கள் 
6. அதிபன் வி. - கோவை - 464 மதிப்பெண்கள் 
7. தனலட்சுமி எம். - சேலம் - 462 மதிப்பெண்கள் 
8. மகாலட்சுமி பி. - விருதுநகர் - 459 மதிப்பெண்கள் 
8. முனிஸ்வரி எம். - தெற்கு சென்னை - 459 மதிப்பெண்கள் 
9. பூபதி சி. - திருவள்ளூர் - 458 மதிப்பெண்கள் 
10. பிட்சைக்கண்ணன் எஸ். - விருதுநகர் - 457 மதிப்பெண்கள் 
10. ராதிகா கே. - திருச்சி - 457 மதிப்பெண்கள் 
10. பிரேம்குமார் ஏ. - சென்னை - 457 மதிப்பெண்கள்

No comments:

Post a Comment