FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, May 1, 2015

செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி



30.04.2015, சென்னை
பிளஸ் 2 முடித்த செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழிப் பயிற்சி, கணினிப் பயிற்சி முகாம் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மத்திய அரசு தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம், வேலை- பயிற்சித் துறை, ராமாபுரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் இந்த முகாம் தொடர்ந்து 45 நாள்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தின் துணை இயக்குநர் ஜி.தங்கராஜ் கூறியதாவது:

செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் பிளஸ் 2 முடித்து கல்லூரிகளில் மேற்படிப்பைத் தொடரும்போது ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவும், படிக்கவும் தடுமாறுகின்றனர். அதேபோல கணினி மென்பொருள் தொடர்பானத் தகவல்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆங்கில மொழி உச்சரிப்பு, இலக்கணம், கணினி குறித்த அடிப்படைப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒரு பிரிவுக்கு ("பேட்ச்') 25 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

90 சதவீத வேலைவாய்ப்பு: இதுதவிர தட்டெழுத்து, கணினி, மின்சாதனப் பொருள்கள் பழுது பார்த்தல், தையல் பயிற்சி, ஸ்கிரீன் பிரிண்டிங் உள்பட 8 வகையான பயிற்சிகள் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிற்சி முடித்தவர்களில் 90 சதவீதம் பேர் பிபிஓ துறை உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்தப் பயிற்சி முகாம்களில் பங்கேற்க விரும்புவோர் தாங்கள் மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றுடன் கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

முன்னதாக உயர்தர மேம்பாட்டுப் பயிற்சி மையத்தின் இயக்குநர் கயித்தமலை, தகவல் பரிமாற்றம், கணினி அடிப்படைப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment