FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, May 1, 2015

செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி



30.04.2015, சென்னை
பிளஸ் 2 முடித்த செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழிப் பயிற்சி, கணினிப் பயிற்சி முகாம் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மத்திய அரசு தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம், வேலை- பயிற்சித் துறை, ராமாபுரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் இந்த முகாம் தொடர்ந்து 45 நாள்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தின் துணை இயக்குநர் ஜி.தங்கராஜ் கூறியதாவது:

செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் பிளஸ் 2 முடித்து கல்லூரிகளில் மேற்படிப்பைத் தொடரும்போது ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவும், படிக்கவும் தடுமாறுகின்றனர். அதேபோல கணினி மென்பொருள் தொடர்பானத் தகவல்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆங்கில மொழி உச்சரிப்பு, இலக்கணம், கணினி குறித்த அடிப்படைப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒரு பிரிவுக்கு ("பேட்ச்') 25 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

90 சதவீத வேலைவாய்ப்பு: இதுதவிர தட்டெழுத்து, கணினி, மின்சாதனப் பொருள்கள் பழுது பார்த்தல், தையல் பயிற்சி, ஸ்கிரீன் பிரிண்டிங் உள்பட 8 வகையான பயிற்சிகள் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிற்சி முடித்தவர்களில் 90 சதவீதம் பேர் பிபிஓ துறை உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்தப் பயிற்சி முகாம்களில் பங்கேற்க விரும்புவோர் தாங்கள் மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றுடன் கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

முன்னதாக உயர்தர மேம்பாட்டுப் பயிற்சி மையத்தின் இயக்குநர் கயித்தமலை, தகவல் பரிமாற்றம், கணினி அடிப்படைப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment