FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, May 1, 2015

செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி



30.04.2015, சென்னை
பிளஸ் 2 முடித்த செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழிப் பயிற்சி, கணினிப் பயிற்சி முகாம் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மத்திய அரசு தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம், வேலை- பயிற்சித் துறை, ராமாபுரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் இந்த முகாம் தொடர்ந்து 45 நாள்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தின் துணை இயக்குநர் ஜி.தங்கராஜ் கூறியதாவது:

செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் பிளஸ் 2 முடித்து கல்லூரிகளில் மேற்படிப்பைத் தொடரும்போது ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவும், படிக்கவும் தடுமாறுகின்றனர். அதேபோல கணினி மென்பொருள் தொடர்பானத் தகவல்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆங்கில மொழி உச்சரிப்பு, இலக்கணம், கணினி குறித்த அடிப்படைப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒரு பிரிவுக்கு ("பேட்ச்') 25 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

90 சதவீத வேலைவாய்ப்பு: இதுதவிர தட்டெழுத்து, கணினி, மின்சாதனப் பொருள்கள் பழுது பார்த்தல், தையல் பயிற்சி, ஸ்கிரீன் பிரிண்டிங் உள்பட 8 வகையான பயிற்சிகள் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிற்சி முடித்தவர்களில் 90 சதவீதம் பேர் பிபிஓ துறை உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்தப் பயிற்சி முகாம்களில் பங்கேற்க விரும்புவோர் தாங்கள் மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றுடன் கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

முன்னதாக உயர்தர மேம்பாட்டுப் பயிற்சி மையத்தின் இயக்குநர் கயித்தமலை, தகவல் பரிமாற்றம், கணினி அடிப்படைப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment