FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, May 25, 2015

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப மத்திய அரசு புதிய செயல்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பிற துறைகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டவர்கள், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்.
இந்த இடஒதுக்கீட்டை நிரப்புவதற்கான பணிகளை இதுவரை தொடங்காத துறையி
னர், அந்தப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment