FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, May 25, 2015

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப மத்திய அரசு புதிய செயல்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பிற துறைகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டவர்கள், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்.
இந்த இடஒதுக்கீட்டை நிரப்புவதற்கான பணிகளை இதுவரை தொடங்காத துறையி
னர், அந்தப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment