FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, May 25, 2015

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப மத்திய அரசு புதிய செயல்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பிற துறைகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டவர்கள், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்.
இந்த இடஒதுக்கீட்டை நிரப்புவதற்கான பணிகளை இதுவரை தொடங்காத துறையி
னர், அந்தப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment