FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, May 27, 2015

மனைவி, 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளை கொன்று விவசாயி தற்கொலை!

திண்டுக்கல்: மனைவி மற்றும் தனது 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு விவசாயி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாரிசிலம்பு ஊராட்சிக்குட்பட்டது மார்க்கன்டபுரம். இக்கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயியான இவருக்கு கிருஷ்ணவேணி (42) என்ற மனைவியும், தேன்மொழி(16), வசந்தி(14) என்ற மகள்களும், வசந்த குமார்(12) என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு முருகேசன் தனது 3 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவர்களுக்கு  இறுதி சடங்குகள் செய்துள்ளார். பின்னர் முருகேசனும், மனைவி கிருஷ்ணவேணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனார். வழக்கம் போல் இன்று காலை முருகேசனின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்த ஆட்கள், நீண்ட நேரமாகியும் முருகேசன் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, 5 பேரும் தற்கொலை செய்து கொண்டதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் என்ன விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அவரது உறவினர் கூறும் போது, முருகேசனின் 3 பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகளாக இருந்ததால் நீண்ட நாட்களாக  மனஉளைச்சலில் இருந்த முருகேசன், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment