FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, May 27, 2015

மனைவி, 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளை கொன்று விவசாயி தற்கொலை!

திண்டுக்கல்: மனைவி மற்றும் தனது 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு விவசாயி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாரிசிலம்பு ஊராட்சிக்குட்பட்டது மார்க்கன்டபுரம். இக்கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயியான இவருக்கு கிருஷ்ணவேணி (42) என்ற மனைவியும், தேன்மொழி(16), வசந்தி(14) என்ற மகள்களும், வசந்த குமார்(12) என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு முருகேசன் தனது 3 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவர்களுக்கு  இறுதி சடங்குகள் செய்துள்ளார். பின்னர் முருகேசனும், மனைவி கிருஷ்ணவேணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனார். வழக்கம் போல் இன்று காலை முருகேசனின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்த ஆட்கள், நீண்ட நேரமாகியும் முருகேசன் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, 5 பேரும் தற்கொலை செய்து கொண்டதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் என்ன விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அவரது உறவினர் கூறும் போது, முருகேசனின் 3 பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகளாக இருந்ததால் நீண்ட நாட்களாக  மனஉளைச்சலில் இருந்த முருகேசன், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment