FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, May 27, 2015

மனைவி, 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளை கொன்று விவசாயி தற்கொலை!

திண்டுக்கல்: மனைவி மற்றும் தனது 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு விவசாயி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாரிசிலம்பு ஊராட்சிக்குட்பட்டது மார்க்கன்டபுரம். இக்கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயியான இவருக்கு கிருஷ்ணவேணி (42) என்ற மனைவியும், தேன்மொழி(16), வசந்தி(14) என்ற மகள்களும், வசந்த குமார்(12) என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு முருகேசன் தனது 3 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவர்களுக்கு  இறுதி சடங்குகள் செய்துள்ளார். பின்னர் முருகேசனும், மனைவி கிருஷ்ணவேணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனார். வழக்கம் போல் இன்று காலை முருகேசனின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்த ஆட்கள், நீண்ட நேரமாகியும் முருகேசன் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, 5 பேரும் தற்கொலை செய்து கொண்டதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் என்ன விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அவரது உறவினர் கூறும் போது, முருகேசனின் 3 பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகளாக இருந்ததால் நீண்ட நாட்களாக  மனஉளைச்சலில் இருந்த முருகேசன், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment