FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, May 27, 2015

மனைவி, 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளை கொன்று விவசாயி தற்கொலை!

திண்டுக்கல்: மனைவி மற்றும் தனது 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு விவசாயி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாரிசிலம்பு ஊராட்சிக்குட்பட்டது மார்க்கன்டபுரம். இக்கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயியான இவருக்கு கிருஷ்ணவேணி (42) என்ற மனைவியும், தேன்மொழி(16), வசந்தி(14) என்ற மகள்களும், வசந்த குமார்(12) என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு முருகேசன் தனது 3 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவர்களுக்கு  இறுதி சடங்குகள் செய்துள்ளார். பின்னர் முருகேசனும், மனைவி கிருஷ்ணவேணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனார். வழக்கம் போல் இன்று காலை முருகேசனின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்த ஆட்கள், நீண்ட நேரமாகியும் முருகேசன் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, 5 பேரும் தற்கொலை செய்து கொண்டதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் என்ன விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அவரது உறவினர் கூறும் போது, முருகேசனின் 3 பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகளாக இருந்ததால் நீண்ட நாட்களாக  மனஉளைச்சலில் இருந்த முருகேசன், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment