FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, May 14, 2015

'டிஜிட்டல்' காதுகேட்கும் கருவியால் குழந்தைகளுக்கு பெரும் பயன்

14.05.2015, பந்தலூர்:
பந்தலூரில் நடந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்ட நிர்வாகம்; ஆதிவாசிகள் நலச்சங்கம்; விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் டிரஸ்ட்; மத்திய அரசின் அலியாவர் ஜங் தேசிய நிறுவனம் ஆகியவை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உபகரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை, பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தினர்.'நாவா' திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் தலைமை வகித்தார். தேசிய நிறுவன நிர்வாகி டாக்டர் அருண்பானிக் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், "கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் காதுகேட்கும் திறனை இழந்துள்ளதை தடுக்கும் வகையில், சமூக நோக்கத்தோடு முகாம்களை நடத்தி, 10ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காதுகேட்கும் கருவி இலவசமாக வழங்கப்படுகிறது. டிஜிட்டல் முறையிலான காது கேட்கும் கருவி என்பதால், குழந்தைகளுக்கு இந்த கருவி பெரும் பயனுள்ளதாக அமையும்.அதேபோல, நடக்க முடியாத நபர்கள் பயன்படுத்தும் வகையில், தள்ளுவண்டி, செயற்கை கால் போன்றவையும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முகாம்களில் ஏழை மக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்,” என்றார். நிகழ்ச்சியில், டாக்டர்கள் கார்த்திகேயன், ஷர்டாபட்கர், நவீன் செந்தில்குமார், ஜெய்கணேசமூர்த்தி, பூர்னாஜித், கருப்புசாமி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சையளித்தனர். தேசிய அறக்கட்டளை நிர்வாகி நிக்கோலஸ்,நல அலுவலக பணியாளர் விஜயன், சி.டி.ஆர்.டி. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நாவா பணியாளர்கள் நீலகண்டன், புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment