FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, May 14, 2015

'டிஜிட்டல்' காதுகேட்கும் கருவியால் குழந்தைகளுக்கு பெரும் பயன்

14.05.2015, பந்தலூர்:
பந்தலூரில் நடந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்ட நிர்வாகம்; ஆதிவாசிகள் நலச்சங்கம்; விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் டிரஸ்ட்; மத்திய அரசின் அலியாவர் ஜங் தேசிய நிறுவனம் ஆகியவை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உபகரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை, பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தினர்.'நாவா' திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் தலைமை வகித்தார். தேசிய நிறுவன நிர்வாகி டாக்டர் அருண்பானிக் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், "கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் காதுகேட்கும் திறனை இழந்துள்ளதை தடுக்கும் வகையில், சமூக நோக்கத்தோடு முகாம்களை நடத்தி, 10ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காதுகேட்கும் கருவி இலவசமாக வழங்கப்படுகிறது. டிஜிட்டல் முறையிலான காது கேட்கும் கருவி என்பதால், குழந்தைகளுக்கு இந்த கருவி பெரும் பயனுள்ளதாக அமையும்.அதேபோல, நடக்க முடியாத நபர்கள் பயன்படுத்தும் வகையில், தள்ளுவண்டி, செயற்கை கால் போன்றவையும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முகாம்களில் ஏழை மக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்,” என்றார். நிகழ்ச்சியில், டாக்டர்கள் கார்த்திகேயன், ஷர்டாபட்கர், நவீன் செந்தில்குமார், ஜெய்கணேசமூர்த்தி, பூர்னாஜித், கருப்புசாமி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சையளித்தனர். தேசிய அறக்கட்டளை நிர்வாகி நிக்கோலஸ்,நல அலுவலக பணியாளர் விஜயன், சி.டி.ஆர்.டி. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நாவா பணியாளர்கள் நீலகண்டன், புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment