FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, May 14, 2015

'டிஜிட்டல்' காதுகேட்கும் கருவியால் குழந்தைகளுக்கு பெரும் பயன்

14.05.2015, பந்தலூர்:
பந்தலூரில் நடந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்ட நிர்வாகம்; ஆதிவாசிகள் நலச்சங்கம்; விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் டிரஸ்ட்; மத்திய அரசின் அலியாவர் ஜங் தேசிய நிறுவனம் ஆகியவை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உபகரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை, பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தினர்.'நாவா' திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் தலைமை வகித்தார். தேசிய நிறுவன நிர்வாகி டாக்டர் அருண்பானிக் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், "கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் காதுகேட்கும் திறனை இழந்துள்ளதை தடுக்கும் வகையில், சமூக நோக்கத்தோடு முகாம்களை நடத்தி, 10ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காதுகேட்கும் கருவி இலவசமாக வழங்கப்படுகிறது. டிஜிட்டல் முறையிலான காது கேட்கும் கருவி என்பதால், குழந்தைகளுக்கு இந்த கருவி பெரும் பயனுள்ளதாக அமையும்.அதேபோல, நடக்க முடியாத நபர்கள் பயன்படுத்தும் வகையில், தள்ளுவண்டி, செயற்கை கால் போன்றவையும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முகாம்களில் ஏழை மக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்,” என்றார். நிகழ்ச்சியில், டாக்டர்கள் கார்த்திகேயன், ஷர்டாபட்கர், நவீன் செந்தில்குமார், ஜெய்கணேசமூர்த்தி, பூர்னாஜித், கருப்புசாமி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சையளித்தனர். தேசிய அறக்கட்டளை நிர்வாகி நிக்கோலஸ்,நல அலுவலக பணியாளர் விஜயன், சி.டி.ஆர்.டி. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நாவா பணியாளர்கள் நீலகண்டன், புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment